இன்றைய தியானம் 30-07-2017 (Kids Special)
“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.” – பிலிப்பியர் 4:4
அந்த அடர்ந்த காட்டில் எல்லா மிருகங்களும் சந்தோஷமாய் இருக்க, காகத்தின் கவலை என்னவென்று கேட்போமா? தய்யா தக்கத் தய்யா என்று தாவி, தாவி குரங்கு வந்தது. இதைப் பார்த்த காகம் “Monkey இவ்வளவு ஜாலியாக இருக்கிற” என்றது. “ஆமா நான் நெனச்சா தாவலாம், குதிக்கலாம், ஏன் உருளக்கூட செய்யலாம். என்னை அந்த கடவுள் எவ்வளவோ அழகா படைச்சிருக்காரு பார்த்தியா” என்றது. பிறகு அந்த பக்கமா முயல் ஒன்று ஜிக்கு ஜிக்கு ஜிக்குச்சா என்று குதித்துக் கொண்டே வந்தது. “என்ன முயல் இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருக்கியே. என்ன விஷயம்” என்றது காகம். “அதுவா இன்னைக்கு மைக்கேல் அங்கிள் வீட்டில் ஒரு புரோகிராம் இருக்கு. அதுல நான் டான்ஸ் ஆடப் போகிறேன். கண்ணை உருட்டி, கை, காலை ஆட்டி சூப்பரா பிராக்டிஸ் பண்ணியிருக்கேன்” என்றது. உடனே காகம், “நான் ஒரு பாட்டு பாட வரட்டுமா” என்றது. “அய்யய்யோ உன்னைப் பார்த்தாலே அங்க யாருக்கும் பிடிக்காது. இதுல பாட்டு வேற பாடப் போறியா? உன் கலருக்கு இது தேவைதானா” என்றது. காகம் மிகுந்த கவலையோடு இருக்கையில் யானை வந்தது. “யானை மாமா நீங்க எப்படி இருக்கீங்க?” என்றது காகம். “முன்னால இருந்ததுக்கு இப்போ 70 கிலோ கூடி இருக்கேன்” என்றது. “மாமா உங்களுக்கு இருக்கும் பெலன் எனக்கு இருந்தா எப்படியிருக்கும்” என்றது காகம். “ஏ அண்டங்காக்கா, கடவுள் எனக்கு தந்திருக்கிற பெலனைப் பார்த்தியா, யாரை யாரு பார்த்து பேசினாலும் யானை பெலம்ன்னு என்னை உயர்த்தி உயர்த்தி பேசுவாங்க. நான் ரோட்டுல நடந்தா போதும் சின்ன பிள்ளைங்க முதல் பெரியவங்க வரை மிரளுவாங்க. நான் வரட்டா!” என்று பெருமையோடு சொல்லிக் கொண்டு போனது யானை. நல்ல அழகு இல்லாம, திறமை இல்லாம, நல்ல குரல் கூட இல்லாம பிறந்தது யார் தப்பு, கடவுள் என்னை ஏன் இப்படி படைத்தார் என்று தன்னையே நொந்து கொண்டு கவலையோடு இருந்தது காகம். “Hay! Blocky How are you? “என்ற குரலுடன் கிளி வந்தது. “உனக்கென்ன குறை, எந்த வீட்டிலேயும் கிளி பேசுதுன்னு உன்னை நேசிக்கிறாங்க. உனக்கு சாப்பாடு வச்சா மதிப்பான வாழைப்பழம், ஆனா எனக்கு யாருமே சாப்பிடாத எச்ச சோறுதான், கடவுள் உன்னை விசேஷமா படைச்சிருக்காரு, ஆனா என்னை ம்... ம்....” என்று அழத் தொடங்கியது காகம். “ஏன் உனக்கு என்னாச்சு” என்று கேட்டது கிளி. காகம் நடந்ததையெல்லாம் சொன்னது. “ஐய்யய்யோ கடவுள் உன்னைத்தான் ரொம்ப நேசிக்கிறாரு... எப்படி சொல்ற... வேதத்தில் எலியா தீர்க்கதரிசி இருக்காங்க பார்த்தியா, அவங்கள காகம் கொண்டுதான் போஷித்தார் தேவன். உனக்கு தெரியாதா? உன் பெயரு பைபிளிலேயே இடம்பெற்றிருக்குப்பா...” “அப்படியா! நானும் கடவுளின் பார்வையில் விசேஷமானவன்தானா? இதை நினைக்கும்போது என்றுமே நீங்காத சந்தோஷம் எனக்குள்ளே வருது. இனிமே நான் எதுக்குமே கவலைப்பட மாட்டேன். எப்பவுமே சந்தோஷமா இருப்பேன்” என்றது காகம்.
தம்பி தங்கச்சி, நீங்களும் சில நேரங்களில் எனக்கு அழகு இல்லையே. திறமை இல்லையே, பெலன் இல்லையே அப்படின்னு கவலைப்படக் கூடாது. உங்கள் ஒவ்வொருத்தரையும் ஒரு நோக்கத்தோடு படைத்திருக்கிறார். நீங்க இருக்கிற நிலையில் இயேசப்பாவிடம் உங்களைக் கொடுத்தா சந்தோஷமா மாத்திடுவாரு. Ok வா. கவலையை விட்டு விட்டு எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
No comments:
Post a Comment