Monday, February 4, 2019

ஒன்ஸ் அப்பான் எ டைம்...

ஒன்ஸ் அப்பான் எ டைம்...

தலைமைச்செயலகத்தின் முன்னே நூற்றுக்கும் மேற்பட்ட 60 வயது முதிர்ந்த பெரியவர்கள் அமர்ந்து ஒரு இளைஞரின் வருகைக்காக காத்திருந்தனர்

வெள்ளைநிற அம்பாசிடர் கார் வாயிலில் வரும்போதே தள்ளாத கைகளை உயர்த்தினர் கார் மெதுவாக அவர்களின் அருகில் நின்றது பெரியவர்களின் முகத்தில் இனம்கானாத நரைமுடி சோகத்தில் அப்பியிருந்தது

காரைவிட்டு இறங்கிய அந்த இளைஞர் "உங்களுக்கு என்ன பிரச்சனை? ..என வாஞ்சையோடு வினவினார்

ஒரு பெரியவர் "தம்பி நாங்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இதுவரை நாங்க மாசம் 15 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திட்டு இருந்தோம் இப்போ பணிஓய்வு பெற்று வீட்டில் தன்னந்தனியா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருக்கோம் வயசான காலத்துல வேலைக்கும் போவ முடியல எங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க " என தோய்ந்த குரலில் சொன்னார்..

சுதாரித்த இளைஞர் அருகிலிருந்த ததன் செக்ரட்டரியை கண்ஜாடையிலேயே கோபப்பார்வை பார்த்து,"உடனடியாக இவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு இவர்களை அழைத்துக்கொண்டு என்னோட ஆபிசுக்கு கூட்டி வா" என கட்டளையிட்டு விறு விறுவென தலைமைச்செயலகத்துக்குள் ஓடினார்..

ஒரு நிமிட நேரத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவுகள் பறந்தன தலைமைச்செயலகத்தின் அதிகாரிகள் பரபரப்பாகினர் கோப்புகள் கையெழுத்தாகின செயலாளரின் உத்தரவு நகல் இளைஞனின் டேபிளுக்கு வந்தது

உணவருந்திவிட்டு வந்த வயதான ஆசிரியர்களோடு வந்த செயலாளர் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்..

புன்முறுவலுடன் அந்த இளைஞர் தனது செயலாளரை நோக்கி,"கற்றுத்தந்த ஆசிரியன் கண்கலங்கி நிற்கும் அளவுக்கா நாம் ஆட்சி நட்திட்டு இருக்கோம் அரசாங்கத்துக்காக உழைக்கிற அனைவருக்கும் ஓய்வுக்குபிறகு அவர்களுக்கான பாதி சம்பளத்தை ஓய்வூதியமாக கொடுப்பதற்க்கான அரசாணை இது அவுங்ககிட்ட சொல்லிடு" என உத்தரவிட்டார்..

அந்த இளைஞர் பேரறிஞர் அண்ணா

50 வது நினைவுநாள் இன்று❤❤

No comments: