*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்...
No comments:
Post a Comment