Friday, January 5, 2018

முன் முடிவு வேண்டாம்.

ஒருவர் தன் வீட்டில்  மாட்டுவதற்காக ஒரு *சுவர் கடிகாரம்* வாங்கினார்.
*சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் !*
*பக்கத்து வீட்டுக்காரரிடம்* இரவல் வாங்கலாம் என நினைத்தார். ஆனால் *இரவாகிவிட்டதே ,  காலையில் வாங்கிக் கொள்ளலாம்* என்று விட்டுட்டார்..!
காலையில் பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது *'காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே' னு நெனச்சுட்டா* என்ன செய்வது. அப்புறம் கேட்கலாம்னு விட்டுட்டார்..!
இப்படியே ஒவ்வொரு நாளும் *'விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்' 'வெள்ளிக் கிழமையும் அதுவுமா இரவல் கேக்கறானே' பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே* என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர் !
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டிருந்த்து !
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் *“யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ”னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.*
பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
*இது மாதிரிதான் !*
அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் *நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல்* பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாகிக் கொள்கிறோம்.
நெருக்கமானவர்களுக்குள்  பிரச்சனைகள் வருவதற்கு இது போன்ற *முன்முடிவுகளே*  காரணம் !
உண்மையான காரணம் என்ன என்று  உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும்.
*பிறர் மீதான முன்முடிவுகள்,   முன்மதிப்பீடுகள் மற்றும் அபிப்பிராயங்கள் தவிர்ப்போம் !*

No comments: