Friday, July 6, 2018

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!

இந்தியஅளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!
அனைத்து மாநில பூனைகளையும் வீழ்த்தி குஜராத்  பூனை முன்னனியில் இருந்தது!
கேரளா பூனை
டெல்லி பூனை கர்நாடக பூனை ஆந்திரா  பூனை
இப்படி அத்தனை அனைத்து பூனைகளும் குஜராத் பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!
குஜராத் பூனையல்லவா
பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!
கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் குஜராத் பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!
பார்வையாளர்களுக்கு வியப்பு!
தமிழ் நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி
முக்கி முணங்கி மேடையேறியது!
இதுவா குஜராத் பூனையிடம் மோதப்போகிறது!
பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!
போட்டித்துவங்கியது!
குஜராத் பூனை அலட்சியமாக
தமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது!
தமிழ்நாடு பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!
குஜராத் பூனைக்கு மண்டைக்குள்
ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!
கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!
சற்று நேரம் சென்றபின்,
மெதுவாக கண்விழித்து பார்த்த குஜராத் பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!
தமிழ்நாடு  பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!
போட்டியில்
வென்றதற்காக தமிழ்நாடு பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!
மெதுவாக எழுந்து தமிழ்நாடு  பூனையின்அருகில் சென்று
இத்தனை மாநில பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது
எப்படி?
என்று கேட்டது குஜராத் பூனை!
!!!..............!!!!....................!!!!.....................
குஜராத் பூனையின் காதில் மெதுவாக தமிழ்நாடு பூனை சொன்னது!
.நான் பூனையே இல்லை.!
புலி...டா...!
என் மாநில பஞ்சத்தில்...எடப்பாடி ஆட்சியிலே.. இப்படியாகி விட்டேன்!
பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்! படித்ததில் பிடித்தது.

No comments: