Friday, October 5, 2018

செம காமெடி மராத்தான்...


👩👩👩👩👩👩👩👩‍🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை...
         but
அந்த கரண்டிதான் எங்க இருக்குனு தெரியல்ல...
                                   
😜😜😜😜😜😜😋😋

🕺 ''டேய்..ஓடாதே.. நில்ரா..

எதுக்குடா இவளை தூக்கிட்டு ஓடறே ?''

''நீங்கதானே சார் சொன்னீங்க....

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃

🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"

"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"

"(ஆத்தி இடியாப்பமா இது😳😭)
சூப்பர் செல்லம்👌😀"

👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 😉😉😉

                   ***********  

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?

கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....

கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?

அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே இல்லை.....!!!

                  **********

சத்தியவான் சாவித்திரி.... தன் கணவனை.... எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்....

கதையின் கருத்து :--
ஒரு புருஷன... பொண்டாட்டிகிட்ட இருந்து .... எமதர்மனால கூட காப்பாத்த முடியாது.....!!!

              *************

மனைவி: ஏங்க!  உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலதான் அடிச்சுக்கோணும்.....!

கணவன்: செருப்பு இந்தா இருக்கு.....! புத்திக்கு எங்க போவ!!??

                  *************

கணவன்: "என்ன சமைச்சிருக்கே ...? சாணி வரட்டி மாதிரி இருக்கு... நல்லாவேயில்லை"....

மனைவி: "கடவுளே! .... இந்த மனுஷன் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !

                 **************

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்???

😳😳🙄

     ********************

🤒 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,

🤕 மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கைத் தேடல்..

        *******************

😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது? போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜

       ******************

🙋‍♂ தக்காளி சோறு, பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல்!

💁‍♂ பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!

😤 சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
😂😂
       
        ***************

💰 பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு,

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...

அவன்தான் நகை கடைக்காரன்😆

No comments: