<<<<<<இலா.தமிழடியான்>>>>>
உலகில் பன்னிரு கோடி தமிழன் இருந்தும் இந்தியா ஒன்னறை கோடி சிங்களனுக்கு சாதகமாக இருக்கிறது என்றால் தமிழன் ஏமாளி என்பதாலா இல்லை கோழை என்பதாலா .
தமிழன் தன்னை இந்தியனாக எண்ணிக்கொண்டு இருக்கும் வரையிலும் இலங்கையில் சிங்களன்தான் வெற்றி பெறுவான் என்பதை தமிழர்கள் ஏனோ இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
நாம் எண்ணிக்கொண்டிருப்பது போல இலங்கையில் இரனிலுக்கும் இரச்சபட்சேவுக்கும் ஒன்றும் பரம்பரை பகையேதும் கிடையாது .அவர்களின் ஒற்றுமையான இரசதந்திர நகர்வுகள் இரண்டு பிரிவாக இருப்பதுபஇருந்து தன்னைவிட வலிமைமிகு நாடுகளை நயவஞ்சகமாக ஏமாற்றும் சிங்கள உத்தியே அது
சீனா மீஞ்சினால் இந்தியா .இந்தியா மிஞ்சினால் சீன என தன் தேவைகளுக்கான காய் நகர்த்தல்கள் தான் அது. .அதில் எப்பொழுதும் இலங்கை தோற்றதே கிடையாது .ஆனால் அதனால் ஒருநாள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பகைமூண்டு வருங்காலத்தில் மிகப்பெரிய போர் சூழல் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது .அப்படி போர்சூழல் உருவானால் பக்கிஸ்தான் சீனாவோடு இணைந்து இந்தியாவிற்கு மிகப்பெரிய அழிவை உண்டாக்குவதையும் யாராலும் தடுக்க முடியாது .
ஆக தமிழர்கள் இந்தியாவிற்காக இந்தியனாய் நின்று அழிவதை விட ஒவ்வொருத் தமிழனும் தனித்தமிழ் நாடு கோரிக்கையை வலிமையாக இந்தியஅரசுக்கு புரியும் படி தன்நகர்வுகளை முகநூல் பதிவுகளிலும் பொது இடங்களிலும் விவாதங்களிலும் கொண்டு சோ்த்தோமேயானால் .அது இந்திய அரசுக்கும் .இந்திய உளவுதுறைக்கும் போய் சேர்ந்தால் அப்போது அது இந்தியா தமிழீழத்தை அங்கிகரிக்க வேண்டிய அவசியத்தை உணரும் .உலக நடுகளுக்கு தமிழீழத்தின் அவசியத்தை இந்தியா தானகவே எடுத்துரைக்கும் .அந்த இரசதந்திர நகர்வுகளுக்கு தமிழர்களின் ஒற்றுமை ஒன்றே மூலதனம்
நம்முடைய ஒன்றுபட்டத் தனித் தமிழ்நாடு கோரிக்கை இல்லாமல் .இந்தியன் என்றும் திராவிடன் என்றும் .தலித்தியெனென்றும் பேசிக்கொண்டு .இந்திய அரசை அசைக்கவும் முடியாது பணியவைக்கவும் முடியாது .
ஒட்டுமொத்தத் தமிழரின் தனித்தமிழ் நாடு கோரிக்கை ஒன்றே இந்தியாவை அச்சுறுத்தும் ..அங்கேதான் ஈழத்தின் விடியலும் .தமிழினத்தின் தன்மானமும் அடங்கியுள்ளது...
No comments:
Post a Comment