Thursday, December 20, 2018

விவசாயப் பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் தானே மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்.

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

🌝 தை மழை நெய் மழை.

🌝 மாசிப்பனி மச்சையும் துளைக்கும்.

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.

🌝 புத்துகண்டு கிணறு வெட்டு.

🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய்.

🌝 காணி தேடினும் கரிசல்மண் தேடு.

🌝 களர் கெட பிரண்டையைப் புதை.

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.

🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு.

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை.

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.

🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ.

🌝 அகல உழவதைவிட ஆழ உழுவது மேல்.

🌝 புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு.

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.

🌝 ஆடுபயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்.

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்.

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.

🌝 நிலத்தில் எழுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.

🌝 தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்.

🌝 கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை.

🌝 சொத்தைப்போல் விதையை பேனவேண்டும்.

🌝 விதை பாதி வேலை பாதி.

🌝 காய்த்த வித்திற்கு பழுதில்லை.

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.

🌝 கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது.

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.

🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும் அடர விதைத்தால் போர் உயரும்.

No comments: