*பேரையும், புகழையும் வைத்து,*
*நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.*
*ஆனால், நம்மை விட வசதியிலும்,*
*அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.*
*எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.*
*நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.*
*வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,* *அறிவு,*
*பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.*
*பணிவும் நல்ல நடத்தையும்,*
*எல்லா இடத்திலும் வென்றுள்ளது.*
*எந்த சூழ்நிலையிலும்,*
*பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.*
*அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.*
*எப்படிப்பட்ட பலவீனத்தையும் வெல்வதற்கு ஒரு வழி உண்டு.*
*பலவீனத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல்,*
*வலிமையைப் பற்றியே நம்பிக்கையுடன் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் அது.*
*மௌனமும், சிரிப்பும் மிகச்சிறந்த வார்த்தைகள்.*
*ஒரு பிரச்சனையை மௌனம் குறைத்துவிடும்..*
*அடுத்த பிரச்சனையை சிரிப்பு தீர்த்துவிடும்..*
*எல்லாம் நலமாகட்டும்.*
*நன்மைக்கே*
No comments:
Post a Comment