Monday, February 11, 2019

தோப்புக்கரணம் போட்டால் கிடைக்கும் நன்மைகள்...

*தினமும் 10நிமிடம் தோப்புக்கரணம் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!*

தோப்புகரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதாரணமான ஒன்று, தவறு செய்தலோ அல்லது வீட்டுபாடம் எழுதி வராவிட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பார்கள்.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் பக்தி பரவசதுடன் பிள்ளையார்க்கு முன்பு தோப்புக்கரணம் போடுவார்கள். ஆனால் இன்று இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

பிள்ளையார் முன்பு நின்று தோப்பு கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக தோப்பு கரணம் போடுவது கிடையாது.
சும்மா தோப்புகரணம் போடுவது போல் மூன்று முறை கடமைக்காக குதித்து விட்டு வருவதை பார்த்திருகின்றோம். ஆனால் தோப்புகரணம் போடும்போது வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும்.

தோப்புகரணம் போடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளை அழுத்தி பிடிப்பதினால் மூலையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூலை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது.

இதனை பலவித கருவிகளை கொண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மூலையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூலைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது. ஆட்டிசம்( தனக்கென்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாக பயணிப்பவர்கள் தான் ‘ஆட்டிசம்’ ) போன்ற மன இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இவர்கள் இன்றுதான் கண்டு பிடித்துள்ளனர், ஆனால் நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்து நாம் அரியாமல் நம்மை தோப்புகரணமும் போட வைத்துள்ளனர்.

No comments: