நண்பர் சிவாவிடம் குமார் தனது 50வது திருமணநாள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
சிவா: 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.
குமார்: என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.
சிவா: வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
குமார்: அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
😍😍😍😍😍
கார்த்திகா: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்.
சந்தோஷ்: சந்தோஷம் ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
கார்த்திகா: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
😍😍😍😍😍😍
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்.... எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
😍😍😍😍😍😍
டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப் பேசுறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!
😍😍😍😍😍
No comments:
Post a Comment