ஆணவம் கொண்டவன் எப்பொழுதும் திமிரின் உச்சத்தில் இருப்பான்,
இவன் நினைத்ததை செய்தே தீருவான், பிடிவாதம் கொண்டவன் என பல பெயரில் சொல்லிக்கொண்டு போகலாம்.
அப்படிப்பட்ட ஆணவக்காரர்கள் அடக்கம் செய்யபப்ட்ட கல்லறையில் எழுதியவை வாசங்கள்...
*உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
*மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு,இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப் போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது.,
ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள்.
இவ்வளவுதானா வாழ்க்கை..? ஆம்.,அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப் போனது.,
நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?
நமது *பதவியா? *நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது *படிப்பா? *நமது *வீடா? *நம் முன்னோர்களின் நமக்காக சேர்த்து வைத்த சொத்தா?
* நமது *அறிவா?* நமது *பிள்ளைகளா?*எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
''ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கியபின் யாருமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் இன்றைய சமூகத்தில் வாழும் நாம்தான் எச்சரிக்கையோடு நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.
ஆம்.,நண்பர்களே..,
*பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து ,மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*
*ஒரே முறை வாழப் போகிறோம்.நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம்.
அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.
*பிறரை வாழ வைத்து வாழ்வோம்.*
No comments:
Post a Comment