Tuesday, July 2, 2019

அன்பிற்குரிய அப்பாவைப் பற்றி...

அப்பாவுக்கு முன்பு குரலை உயர்த்தி போசதீர்கள்,
வெகுண்டு இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்...

அப்பாவின் கண்டிப்பது வேறு யாரும் கண்டிக்க கூடாது என்பதால் தான்

அப்பாவிற்கு மரியாதை காட்டுங்கள்...
அதே போல்உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்வார்கள்

அப்பா சொல்வதை கவனமாக கேளுங்கள், இல்லையென்றால் பிறர் சொல்வதை நாம் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்...

அப்பாவின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம், இதில் எந்த பக்கத்தையும் படித்து நாம் தெளிவு அடையலாம்...

அப்பா என்றால் பாதுகாப்பு, கண்டிப்பான முறையில், நமக்கு நன்மையே  நடக்கும்...

முகம் தெரியாத யாருக்கோ தொலைபேசியில் கூட மரியாதை செய்கிறோம்...
செல்லமாய் கொஞ்சி வளர்த்தாரே, அதற்கு முதலில் மரியாதை செய்யுங்கள்...

உலகம் உன் உள்ளங்கைக்குள் வரட்டும் என தலையின் மேல் தூக்கிக் காட்டுவார் அப்பா...

முழுவதும் உன்னை தெரிந்த நண்பன் அப்பா, அவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

தந்தையை மதித்தால் நீ கோபுரத்தின் மேல்... அவரின் அருமையை தெரிந்து கொள்ளுங்கள்...

என் மகள்களின் கடிதத்தின் சுருக்கம்...
என்ன தவம் செய்தேனோ, இவர்கள் என் மகள்கள் என சொல்வதற்கு...
   

No comments: