Saturday, August 31, 2019

வரலாற்றில் இன்று : 01.09.2019

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.[1][2]

1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.

1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.

1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.

1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.

1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.

1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.

1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1859 – 1859 சூரியப் புயல் இடம்பெற்றது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.

1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.

1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.

1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.

1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.

1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.

1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.

1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.

1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.

1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.

1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.

1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.

1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981 – மத்திய ஆபிரிக்கக் குடியர]சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.

1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1593 – மும்தாஜ் மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி (இ. 1631)

1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)

1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)

1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)

1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ஆன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)

1925 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2018)

1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)

1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)

1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)

1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)

1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)

1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை

1965 – சுலக்சனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குனர்

1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை

1980 – கரீனா கபூர், இந்திய நடிகை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

870 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810)

1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)

1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)

1581 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534)

1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)

1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910

1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1913)

1983 – மறை. திருநாவுக்கரசு, தமிழகத் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)

1988 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1911)

2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

             *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

விடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)

அறிவு நாள்
(உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

No comments: