நம் மனதில் மற்றவர்கள் நமக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த தீமைகளை இறக்கி வைக்க எண்ணம் இல்லாமல் இன்றளவும் சேர்த்து வைத்துள்ளோம்.. ..
அந்த நினைவுகளில் எத்தனையோ, நம் மனதில் இன்று வரை ரணங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப்படும் போதும் எப்படி எல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம்.
பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்:
“நம் எதிரிகளை மனதளவில் நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறோம்.
அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் மிகவும் ஆனந்தக் கூத்தாடுவார்கள்.
நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது”. அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கி இருக்கிறது.
ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு பிஞ்சுபோச்சு. தொடர்ந்து நடக்க முடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் சென்று கொடுத்தார்.
அவரோ அந்தச் செருப்பைப் பார்த்து விட்டு,'' ஐயா நிறைய தைக்க வேண்டி இருக்கிறது.
நீங்கள் உங்கள் செருப்பைத் தந்து விட்டு.மாலை வாருங்கள், அதற்குள் தைத்து வைக்கிறேன் என்றார்.
துறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்.. ஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்து போவேன்..? என்றார்.
அதற்கு அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி... ஐயா., உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
மாலை வரும் போது இந்தச் செருப்பைத் தந்து விட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.
ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி.என்னது வேறு இன்னொருவர் செருப்பை நான் அணிவதா..என்று சிந்தித்தார்..
அவர் மனசாட்சி பேசியது..
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..
இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், அவர் மீதான கோபத்தையும், பொறாமையையும் மனதில் இறக்கி வைக்காமல் தூக்கிச் சுமக்கிறோமே... என்று
ஆம்.,நண்பர்களே..,
குறைகளும், நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன.
வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கு எடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்...
No comments:
Post a Comment