பிரச்சனை என்று வந்துவிட்டால்
தோலோடு தோல் வந்து
நின்று, சிக்கலை சீராக்கி,
சிரிக்க வைத்து,
கேட்காமலேயே உதவி
செய்து, சொந்தம், பந்தம்
என அப்பார்பட்டு,
இயற்கை போல் நின்று
இமயம் போல் உயர்ந்து,
சகோதரராக சகோதரியாக வானம்
போல் உயர்ந்த,
பூமி போல் பரந்த,
என்றும் விலைமிகு
உடன்பிறவா அன்பே
நாம் அருவியென
அன்பை பொழிந்து
கற்பனை களைந்து
உறவுகளால் நண்பர்களானோம்
இவ்வையகத்து வாழ்வினில்
என்றும் நட்புக்கு
இலக்கணம் வகுப்போம்
நட்பென்னும் கூடாரத்தில்..!
No comments:
Post a Comment