Sunday, September 8, 2019

காமராசர்

காமராசரை எல்லாரும் காங்கிரசுக்காரர் என்று தான் அறிந்திருப்பார்கள் ..

ஆனால் திராவிடக் கருத்தியலைச் சார்ந்தவர் அவரென்பது அவரின் அரசியல் வாழ்வியல் உணர்த்தும்..
..
தேசிய நீரோட்டத்தில்  தவிர்க்க முடியாத ஆற்றலாகதா திகழ்ந்தார்

#King maker of India ..
என்று அவரைச் சொன்ன காலமும் உண்டு..
திரு.சத்தியமூர்த்தியின் சீடராக அரசியலில் நுழைந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை..
ராஜாஜியின் ஆதிக்கத்தின்/ஆளுமையின் முன்பு அறியப்படாதவராக அல்லது அதிகம் பேசப்படாதவராகவே இருந்தார்..

ராஜாஜியின் வரலாற்றுப்பிழை இவருக்குப் பிரகாசமான அரசியல் வாழ்வைத் தந்தது ..

குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி அறிமுகப்படுத்திய போது வெகுண்டெழுந்த பெரியார் ..
கிரேசின் தீப்பெட்டியுமாக காத்திருங்கள் ..எப்போது நான் சொல்கிறோனே அப்போது அக்ரஹாரத்தை கொளுத்தலாம் என்றார் பெரியார்.
இவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டதில்லை.. சூழ்நிலை மிக மோசமாவது கண்டு ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்..
..
ராஜாஜியை மாற்றிய தீரவேண்டும்....
அந்த இடத்திற்கு மீண்டும் பார்ப்பனன் வந்துவிடக் கூடாது என்பதிலே #பெரியார் மிக எச்சரிக்கையாக  காய் நகர்த்தினார்..

காமராசரை முன்னிலைப் படுத்தினார்

ஆதரிப்பதாக அறிக்கை வந்தது..

காமராசரை #குடியாத்தத்தில் நிற்கச் சொன்னார்..

அப்போது காமராசர் நான் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவன் குடியாத்ததில் முதலியார்களும் முஸ்லீமான்களுமே அதிகம்  வசிக்கிறார்கள் என்ற போது உன்னை எப்படி செயிக்கவைப்பதென்று எனக்கு தெரியும் எனக் கூறி பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரைத் தமிழர்கள் எல்லாரும் ஆதரிக்கவேண்டுமென்றார்...

தி.கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணாவும்.. காமராசரை அந்தத் தேர்தலில் ஆதரித்தார்..

#குணாளா மணாளா குலக்கொழுந்தே ..சென்றுவா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்..
கண்ணியத்திற்குரிய #
காயிதெ மில்லத்தும் ஆதரித்தார்..
காமராசர் வென்றார்..
..
காமராசர் முதல்வரான போது  அப்போதைய காங்.தலைவர்  U.N.தேவரை சந்திக்கவில்லை...

நேராக

#பெரியாரைச் சந்தித்து

என்ன செய்யவேண்டுமென்ற போது .. ராஜாஜி 6000 பள்ளியை மூடிட்டார் ..

அதைத்
திறந்து நம்ம பிள்ளைங்களைப் படிக்க வைங்க .. என்றார்..

பள்ளிகளைத் திறந்தும் குழந்தைகளைப் படிக்கவைக்கப் பெற்றோர்கள் அணுப்ப மறுத்ததை அறிந்து
சோறு போட்டா அனுப்பிவைப்பாய்ங்க..

என்ற போது அதற்கான போதிய நிதி அரசிடமில்லை என்றவுடன் செல்வந்தர்கள் தொழில் அதிபர்களிடம் நன்கொடை வசூலித்து மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார் காமராஜர்..

பணம் போதவில்லை என்றவுடன் விவசாயிகளிடம் முதல் மரக்காய்  சாமிக்கும் இரண்டாவது மரக்காய் ஊர்கோவிலுக்கு கொடுக்குறீங்க மூணாவது மரக்காய் எனக்குக் கொடுங்க நான் பிள்ளைகளுக்குச் சோறு போடுறேன் என்று எம் பிள்ளைகளின் பசியைப் போக்கினார்..
..
#இரட்டைமலை சீனிவாசன் பேரன் #பரமேசுவரனை அறநிலையத் துறை அமைச்சராக்கப் பெரியார் கோரினார்....

அதையும் ஏற்று சமூகநலத்துறை (அப்போது சமூகநலத்தில் தான் அறநிலையம் இருந்தது) அமைச்சராக்கினார்..

அண்ணல் அம்பேத்கர் ..
குளத்தில் குளிக்கவும் குனிந்து அள்ளி தண்ணீர் குடிக்கவும் மறுக்கிறான் ஆனால் தமிழகத்தில் என் இனத்தை சேர்ந்தவன் கோவிலுக்குள் நுழையும் அதிகாரம் பெற்றான் என்றார்..

#பரமேசுவரன் வருகை கண்டு தில்லை நடராஜரும்
சீரங்கத்து ரங்கநாதரும் பதறும் காட்சி கண்டேன் அந்த மாட்சி கண்டேன் என்றார்
#பேரறிஞர் அண்ணா..
..
#காமராசர் மிக சிறந்த நாத்திகர்..

எதுவும் உழைப்பால் வரவேண்டுமென்றும்
மூடநம்பிக்கையால் எந்தப் பலனுமில்லை என்றார்..

ஆர்எஸ்எஸ் அவரைக் கொலை செய்ய முயற்சித்த போதும்

என்னைக் கொல்லலாம் ஆனால் என் கருத்தை.. செயலை இதனால் தடுத்துவிட முடியாது என்றார்..

பெரியார் மிகவும் மதித்த தலைவர்..

பெரியார் கருத்துகளுக்கு....
சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தந்த சிற்பி..

நிறைய
கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் காமராசரின் ஆட்சியை ..

#திராவிடக் கொள்கையின் அல்லது திராவிடக் கருத்தியல் ஆட்சியின் தொடக்கமாகவே கருதவேண்டும் ..

நல்ல தலைவராக திமுக அவரை மதித்துக் கொண்டாடி இருக்கிறது..

அவசரநிலையின் போது ஆட்சியே போனாலும் காமராசரைக் கைது செய்யமுடியாதென்று உறுதியோடிருந்தவர் கலைஞர்..

தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாய் கோபாலபுரத்திலே கலைஞர் வருவதற்குமுன் வந்து நின்றவர் அதே போல காமராசரின் மறைவின் போது  சகோதரனைப்போல முன்னின்று எல்லா காரியங்களையும் கலைஞர் செய்தார்..

முன்பு எழுதிய கவிதையொன்று ஞாபகம் வந்தது..
..
என்ன..
சொல்லிவிட போகிறேன்
எளிமை..
எப்போதும்..
சொல்லில்
இனிமை..
துணிவு..
செயல்திறன்..
அஞ்சாமை 
ஆளுமை,
இரக்கம்..
நேர்மை.
பொதுவாழ்வில்
தூய்மை..

கல்வி

#எல்லாருக்கும்_கல்வி ..
..
எங்கள் அறிவாசான் #பெரியார் ...

பள்ளியில் கடவுள் வாழ்த்துக்கு பதில் காமராசர் வாழ்த்தைப் பாடவேண்டுமென்றார் ...

இதைவிடவா சொல்லி விடப் போகிறோம்..!?
..
#காமராசர் பிறந்தநாள் சூலை15
..
#ஆலஞ்சியார்.

No comments: