Saturday, April 18, 2020

பெற்றோரை சந்தோஷப்படுத்தி வாழ்வோம்!!!

💠   ஒரு நாள் தன் தாயை ஒரு உயர்தர உணவகத்துக்கு  அழைத்துச் சென்றான் மகன்.  

💠   அவரது தாய் வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.

💠   அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்  போது  பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது உடைகள் மேலும்  தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது. 

💠   பக்கத்திலிருந்து 
 சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்.

💠    ஆனால் 
மகனோ மிகவும் அமைதியாக அம்மா  சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். 

💠   இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தாயை  ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப் பருக்கைகளைத்
துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான்.

💠   இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர உணவகமே மிக அமைதியானது. 

💠   மகன் counter க்கு  சென்று பில்லிற்ற்கு பணம் செலுத்தி தனது தாயை  கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான். 

💠   அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில்  ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

💠   மகனோ “இல்லையே நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார். 

💠    அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிடுச் செல்கிறீர்கள்; 

❤   இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் 

❤   அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்”. என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.

   
💠   மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் நம்மை  கவனமாகப் பார்த்துக்கொண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்! !!!

💠   நமது பெற்றோரும்  தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை எமக்காகத் தியாகம் செய்ததோடு எம்மை மிகுந்த அன்போடு  பார்த்துக்கொண்டார்கள்.

💠   பெற்றோரை பாரம் என நினைத்ததாலேயே அநேக முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளன.

👉🏾   10 மாதம் குழந்தையை சுமக்கிற எந்த தாயும் தன் குழந்தையை பாரமாக நினைப்பதில்லை 

👉🏾   கர்ப்ப காலத்தில்  தன் குழந்தையின் நிமித்தம்  உண்டாகும் பெலவீனங்களை எந்த தாயும் பாரமாக நினைப்பதில்லை.

👉🏾  குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் போது தன் தூக்கத்தை குழந்தைக்காக  தியாகம் செய்வதை எந்த தாயும்  பாரமாக நினைப்பதில்லை.

👉🏾  தன் வாழ்க்கை முழுவதும் தன் குழந்தையை சுற்றியே தன் மனதை செலுத்தி கண்ணும் கருத்துமாக செயல்படும் தாயானவள்..தன் ஆசை, தன் விருப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிடுவதை பாரமாக நினைப்பதில்லை.
"

👉🏾   பெற்றோர் === இந்த உலகத்தில் நமக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் எனலாம்.

👉🏾   அன்பு ===இதை நாம் உலகத்தில் முதலில் பெறுகிற இடம் நம் தாயிடமே..

👉🏾   பெற்றோரை சந்தோஷப்படுத்தி வாழ்வோம்!!!!

No comments: