💠 ஒரு நாள் தன் தாயை ஒரு உயர்தர உணவகத்துக்கு அழைத்துச் சென்றான் மகன்.
💠 அவரது தாய் வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.
💠 அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது உடைகள் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது.
💠 பக்கத்திலிருந்து
சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்.
💠 ஆனால்
மகனோ மிகவும் அமைதியாக அம்மா சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
💠 இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தாயை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப் பருக்கைகளைத்
துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான்.
💠 இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர உணவகமே மிக அமைதியானது.
💠 மகன் counter க்கு சென்று பில்லிற்ற்கு பணம் செலுத்தி தனது தாயை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான்.
💠 அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.
💠 மகனோ “இல்லையே நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார்.
💠 அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிடுச் செல்கிறீர்கள்;
❤ இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்
❤ அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்”. என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.
💠 மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் நம்மை கவனமாகப் பார்த்துக்கொண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்! !!!
💠 நமது பெற்றோரும் தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை எமக்காகத் தியாகம் செய்ததோடு எம்மை மிகுந்த அன்போடு பார்த்துக்கொண்டார்கள்.
💠 பெற்றோரை பாரம் என நினைத்ததாலேயே அநேக முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளன.
👉🏾 10 மாதம் குழந்தையை சுமக்கிற எந்த தாயும் தன் குழந்தையை பாரமாக நினைப்பதில்லை
👉🏾 கர்ப்ப காலத்தில் தன் குழந்தையின் நிமித்தம் உண்டாகும் பெலவீனங்களை எந்த தாயும் பாரமாக நினைப்பதில்லை.
👉🏾 குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் போது தன் தூக்கத்தை குழந்தைக்காக தியாகம் செய்வதை எந்த தாயும் பாரமாக நினைப்பதில்லை.
👉🏾 தன் வாழ்க்கை முழுவதும் தன் குழந்தையை சுற்றியே தன் மனதை செலுத்தி கண்ணும் கருத்துமாக செயல்படும் தாயானவள்..தன் ஆசை, தன் விருப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிடுவதை பாரமாக நினைப்பதில்லை.
"
👉🏾 பெற்றோர் === இந்த உலகத்தில் நமக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் எனலாம்.
👉🏾 அன்பு ===இதை நாம் உலகத்தில் முதலில் பெறுகிற இடம் நம் தாயிடமே..
👉🏾 பெற்றோரை சந்தோஷப்படுத்தி வாழ்வோம்!!!!
No comments:
Post a Comment