Saturday, December 23, 2017

தேவையை அறிந்து செயல்பட வேண்டும்

*பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.*
*அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.* *பத்தாயிரம் பேர் வருவாங்கனுசொல்லியிருந்தாங்க.*
*அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக்காரன் போயிருந்தான்.அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.*
*கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க குரு* *வந்தபோது அங்கே யாருமே இல்லை.*
*பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.*
*இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.*
*என்னப்பா பண்ணலாம்?’ னு கேட்டார்.* *அய்யா! நான் குதிரைக் காரன்* *எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க* *ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.*
*நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.* *புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க*
*நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’ என்றான்.*
*ஓங்கி  அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.*
*அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,* *அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.*
*தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம்,* *நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி* *பிரமாதப் படுத்திட்டார் குரு.*
*பிரசங்கம் முடிஞ்சுது.*
*எப்படிப்பா இருந்தது என் பேச்சுனு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.*
*அய்யா… நான் குதிரைக்காரன்.* *எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.* *ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க…*
*நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு  குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன்.*
*முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’ என்றான்*
*அவ்வளவுதான். குரு அதிர்ந்துவிட்டார்.*
*மத்தவங்களுக்கு என்ன தேவையோ அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் தான்  சொல்லனும்.*
*புரியாத தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்,,,,*

...

No comments: