Friday, January 5, 2018

யாரிடம் பிரச்சனை உள்ளது

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம். தயக்கம் என்ன பயம்தான்.
இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .
இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லையெனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து பேசுங்கள் ,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக்கொண்டே நெருங்கிச்சென்று பேசுங்கள்.
எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுகேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.
உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக்கேட்டார்.
பதிலில்லை , பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார். அதற்க்கும் பதிலில்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார். மனைவியிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக “ .... இன்றைக்கு என்ன சமையல் ?“ ............என கேட்டார்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து ” ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே , காதில் விழவில்லையா ?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வெச்சுருக்கீங்க என பொரிந்து தள்ளிவிட்டாள்
இப்போது தெரிகிறதா !
பிரச்சினை யார் காதில் என்பது ?
இப்படித்தான் *பிரச்சினை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்*
...

No comments: