Sunday, July 29, 2018

மட்டன் குழம்பு...

தேவையான பொருட்கள்:*
*பொருள்   : அளவு*
*மட்டன்* : அரை கிலோ
*தேங்காய் துருவல்*: கால் கப்
*கசகசா*: அரை டீஸ்பூன்
*சின்ன வெங்காயம்*: 25
*மிளகாய் தூள்*: ஒரு டேபிள் ஸ்பூன்
*சோம்பு தூள்*: ஒரு டீஸ்பூன்
*மல்லித் தூள்*: ஒன்றரை டேபிள் ஸ்பூன்
*பட்டை*: 2
*உப்பு*: தேவைக்கேற்ப
*நல்லெண்ணெய்*:  தேவைக்கேற்ப
*செய்முறை :*
*மட்டனைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கறியில் உள்ள கொழுப்புடன் எடுத்துக் கொள்ளவும்.*
*சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.*
*குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.*
*வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை கொழுப்புடன் சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும். பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்).*
*கறி சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.*
*மிதமான தீயில் வைத்து கறியுடன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.*
*மிளகாய் தூள் வாசம் போனவுடன், தேங்காய், கசகசா விழுதைச் சேர்க்கவும்.*
*கறியுடன் மசாலா மற்றும் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி வேக வைக்கவும். குக்கரிலிருந்து ப்ரசர் வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.*
*சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும்.*
*கமகமக்கும் 歷மட்டன் குழம்பு தயார்.*
_*歷ப. சுப்ரமணிகவிதா歷*_

No comments: