Friday, September 14, 2018

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த தமிழன்!
நாவலந் தீவென்னும் நாட்டின் குடிமகன்!
தமிழென்னும் அமுதுண்டு தன்னுயிர் வளர்த்தவன்!

எப்பால் ஆயினும் பிறப்பால் ஒக்கும்
எல்லா உயிரும் ஒன்றெனக் கண்டே
முப்பால் இயற்றிய முதுகுடிப் பெருமகன்

இலக்கியத்தில் எல்லையை வரைந்தவன்
வடக்கே பனிமலை வானுயர் நெடுமலை
தெற்கே குமரிக் கோடெனும் பெருமலை
கிழக்கும் மேற்கும் கிளர்நதிடும் கடலலை
அகமும் புறமும் அவன்நெறி சொல்லும்!

ஆரியன் மேலாம்! மற்றனைவரும் கீழாம்!
ஆரியன் வந்தான் அனைத்தும் இழந்தோம்!
அன்னைத் தமிழும் அடிமையானது!
ஆரியன் சொன்னதே ஆணையானது!
வேதம் என்றான் விதிமதி என்றான்
புளுகு மூட்டையைப் புராணம் என்றான்!
போதிப்பதெல்லாம் அறிவியல் என்றான்
அடுத்துக் கெடுப்பதை அறவியல் என்றான்
அன்னைத் தமிழை அழிக்க முனைந்தான்!

ஆண்ட பரம்பரை அடிமையானது!
விலைமகள் வீட்டில் விழுந்து கிடந்தான்!
உழைப்போர் எல்லாம் இழிந்தவ ராயினர்!
உண்டு கொழுத்தோர் உயர்குடி ஆயினர்!

ஆரியன் கண்டான்! தமிழன் கண்டான்!
'தமிழன் வரலாறு' தமிழிலே கண்டான்!
தமிழை அழித்தால் தமிழன் அழிவான் !
தக்கதோர் வழியென தன்னுளம் கொண்டான்!
தமிழுக்கு மாற்றாய் தரணியில் ஒருமொழி
இன்னும் தோன்ற இல்லை யாதலால்
தமிழைச் சிதைத்தே சமக்கிருதம் என்றான்!

தமிழும் கிருதமும் மணியும் பவளமுமாம்!
சாற்றினான் அன்றே சதியும் வென்றது!
பெயரைச் சிதைத்தான் ஆயினும் தமிழன்
பெருவினைச் சொல்லை அசைத்தான் இல்லை
தமிழே தன்னை தற்காத்துக் கொண்டது!

பரதேசிகளெல்லாம் பார்ப்பனர் ஆயினர்
பாட்டாளி மக்கள் சூத்திரர் ஆயினர்!
நாடாண்ட பரம்பரை நக்கிப் பிழைத்தது!
நஞ்சை மக்கள் நெஞ்சில் விதைத்தது!
ஆரியம் எதிர்த்தவன் ஆங்கிலம் என்றான்!
அறியா மாக்கள் 'ஆகா' வென்றார்!

ஏடு அறிந்த வரலாறெல்லாம்
வர்க்கப் போரின் வரலாறென்றான்!
மார்க்சின் போதனை மறந்தானில்லை!
மண்ணின் தன்மை அறிந்தானில்லை!
அரிவாள் சுத்தியல் செங்கொடியோடு
ஆருயிர் ஈந்த வீரர்கள் எல்லாம்
ஆரியச் சூழ்ச்சி அறிந்தாரில்லை!
இந்தியாவில் வர்க்கப்போர் இதுதான்
என்று கண்டாரில்லை!

வயிறு பெருத்து மூளை சிறுத்ததால்
வர்க்கப் பரட்சி நடக்கவும் இல்லை!
மொழியினம் பேசி முகிழ்த்தவர்  எல்லாம்
முதலாளிகள் ஆயினர் முடித்தனர் தமிழை!

ஆயினும் நாங்கள் அஞ்சிடவில்லை!
அந்நியன் பால் கெஞ்சிடவில்லை!
மக்களை மயக்கி மதவெறியூட்டி
எந்தமிழினத்தை  எதிரியாய் காட்டும்
ஆரியக் கூட்டம் அழிவது திண்ணம்!
தரகு முதலாளிகள் தயவில் வாழும்
தறுதலைக் கும்பல் தலைவிழும் விரைவில்!

உறுபசி கொண்ட உழைப்பவர் கூட்டம்!
செறுநரை ஒழித்து சிவப்பாய் ஒளிரும்!
காற்றும் நீரும் மலையும் மடுவும்
ஊற்று நீரும் ஊருணி நீரும்
கார்ப்பரேட் உலக களவானிகளுக்கு
கையகப்படுத்தி தாரை வார்க்கும்
இந்திய பார்ப்பன-பனியாக் கும்பலே!
எழுந்து விட்டோம் தமிழராய் நாங்கள்!

இந்தியன் என்றும் இந்து என்றும்
இனியும் ஏய்க்க முடியாது!
ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை
இனியும் ஏற்க முடியாது!

*கார்முகில்* இடியுடன் மாமழை பொழியும்
கறுத்த வானமும் கருஞ்சிவப்பாகும்!
தமிழரு க்கென்று ஒரு தேசம்!
தரணியில் தோன்றும் இது உறுதி!
அன்னைத்தேசம் விடுதலை பெற்றால்
அனைத்து தேசியம் மலர்ந்திடுமே!

கழுதையை குதிரை என்றழைத்தால்
கழுதை குதிரை ஆகிடுமோ?
தரகு-பார்ப்பன எடுபிடி அரசு
தமிழ்நாட்டரசு ஆகிடுமோ?
தில்லியில் இருப்பது தரகு-பார்ப்பன வல்லரசு
தமிழ்நாட்டில் அதன் எடுபிடி அடிமை அரசு!
நமக்கு வேண்டும் தமிழ்தேசிய சனநாயகக் குடியரசு!

ஆரியச் சதிகள் தூளாகும்!
அமெரிக்க சதிகள் தூளாகும்!
எங்கள் நாடு செந்தமிழ் நாடு
இந்திய நாயே வெளியேறு!

- தோழர் செம்மலை
(பு.இ.மு)

No comments: