அன்பர்களே! வணக்கம்!
வருகின்ற டிசம்பர் - 31 ஆம் தேதி திருவாளர் 2018 ஓய்வு பெறுகிறார்.
அவருடைய
12 மனைவிகளும்,
52 பிள்ளைகளும்,
365 பேரக்குழந்தைகளும்...
டிசம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்!
இது தொடர்பான நம் நேர்க்காணலில்
திருவாளர் 2018
அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தங்களுக்குப் பகிர்ந்தது
என்னவெனில்.... *உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் களைந்து துக்கங்கள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிகாகரிப்புகள், கெட்ட எண்ணங்களோடு இன்ன பிறவற்றையும்.... தன்னுடனே எடுத்துச் செல்லவதாக தெரிவித்துள்ளார்!*
அடுத்ததாக
ஓய்வு பெற்றவரின் குமாரர் திருவாளர்
2019 அவர்கள்
ஜனவரி 1 ம் நாள் 12:01மணிக்கு அதிகாலையில் பதவி ஏற்க உள்ளார்.
அவரிடம் இதுபற்றி கேட்டபோது...
இதைப் படிக்கும் நீங்கள் 2018ல், இழந்தவற்றிற்கு ஈடாக.. நிலையான வெற்றி, நீண்ட ஆயுளுடன்... ஆரோக்கியம்,
அன்புடன் ...மகிழ்ச்சி, மன சமாதானத்துடன்.....
வற்றாத நிதி,
தாளாத கீர்த்தியுடன்.... வளவாழ்வு இவற்றோடு
இன்னபிறவும், நீங்கள் நினைக்கும் உயர்ந்த நற்சிந்தனைகளையும் வாரி வாரி வழங்கப்போவதாக சூளுரைத்துள்ளார்!
மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துகிறேன் உள்ளன்போடு! பிறக்கப்போகும் இப்புத்தாண்டு தினத்தினையொட்டி
இனிய 2019 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
வாழ்க! வளமுடன்!!!
No comments:
Post a Comment