Wednesday, January 9, 2019

அருமையான வரிகள்...

🚩மனசு கவலையாக இருக்கும் போது... மனசுக்குப் பிடிச்சவங்க என்னாச்சு என்று கேட்கும் போது... முதலில் வருவது அழுகை தான்...

🚩அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.

🚩கட்டுப்படாத மனதைக் கொண்டவனுக்கு தன்னை உணர்தல் கடினமானச் செயலாகும். ஆனால் மனதைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.

🚩வண்ணங்களில் அழகான மனிதர்களை நேசிப்பதை விட... எண்ணங்களில் அழகான
மனிதர்களை நேசித்துப் பார்... வாழ்க்கை எண்ணம் போல் வண்ண மயமாய் அமையும்...

🚩ஒரே ஒரு முறை நீ தடுக்கி விழும்போதே கிழிந்து விடும், போலியாக நடிப்பவர்களின் முகத்திரைகள்...!

🚩நாங்கள் பணத்தை மட்டும் சிக்கனமாய் பயன்படுத்தவில்லை... எங்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து தானே சிக்கனமாய் பயன்படுத்துகின்றோம்...

🚩குற்றங்களை சொல்பவன் விமர்சகன்... குற்றங்களை சீர்திருத்துபவன் நண்பன்... குற்றமற்றவனாக மாற்றுபவர் கடவுள்...

🚩வெட்டுப்பட்டு விழுவன விரல்களின் கூர்மையே அன்றி நகங்கள் அல்ல...!

🚩மாற்ற முயன்றேன் ஏமாற்றம் கொண்டேன்... மாறத் தொடங்கினேன் ஏற்றம் கண்டேன்...!

🚩மனைவியை நேசிப்பவன் மனைவிக்கு பயப்பட மாட்டான்... மனைவிக்கு பயப்படுபவன் மனைவியை நேசிக்கமாட்டான்...

🚩வாழும் நாட்களில் சந்தோசத்தையும் மன அமைதியையும் தேடுங்கள்... மனிதனுடைய தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை மன அமைதியே மிக முக்கியம்...

🚩பெற்றோர் இருக்கும் போது போற்றாதவர்கள்... இறந்த பின் போற்றுவதில் புண்ணியமில்லை... அவர்கள் இருக்கும் போதே அரவணையுங்கள்... புண்ணியம் கிடைக்கும்...

🚩வீண் பேச்சு, வெட்டிப் பேச்சு பேசுவதை விடுத்து வேலையை ஒழுங்காக ஆன்மீக தொண்டோடு செய்தால் வாழ்க்கையில் உயரலாம்...

No comments: