Sunday, January 20, 2019

ஒரு புகைப்பட கலைஞனின் வரிகள்...

நாம் *புகைப்படகலைஞன்* என்பதில் பெருமிதம்  கொள்வோம்.

1.நம்முடைய  பார்வை 360 டிகிரி கோணம்.

2.நமக்கு திசைகள் கிடையாது.

3.நமக்கு நேர காலம் கிடையாது.

4.நமக்கு மதம்  கிடையாது.

5.சைகைதான் நம்முடைய தாய்மொழி.

6.நமக்கு வேறெந்த மொழிகளும்  கிடையாது.

7.நாம் படித்த மேதைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

8.வரலாற்றை எதிர்காலத்திற்கு பிரதிபலிக்கும்.
" நாம் ஒரு *காலக்கண்ணாடி* "

9.காலத்திற்கு ஏற்ப மாறும் அத்தனையையும் பதிவு செய்யும் நாம் ஒரு காலத்தின் 
" *மையப்புள்ளி* "

10.கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், மூன்றிலும் வாழும் ஓர்
" *அதிசயபிறவி* "

11.சில நேரங்களில் உணவு, தண்ணீர், தூக்கம், இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் ஓர் " *ஒப்பற்றஇயந்திரம்* "

12.நம் கையில் கேமரா இருந்தால் " இந்த பூமியே திரும்பி பார் என்றால் பார்க்கும்"

13.என்னதான் அழகாக இருந்தாலும்
" சார் என்னை கொஞ்சம் அழகாக படம் பிடியுங்கள் " என்று சொல்வதால் நாம் ஒரு " *பிரம்மனின்பினாமி* "

14.இந்த பூமியில் மனிதன் விட்டுச்செல்ல வேண்டிய ஒரே விஷயம் அவனின் புகைப்படம் மட்டுமே!

15.கலியுகத்திலும் கடவுளை காண்பித்தது *புகைப்படமே*

16.சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அதிகம் சென்று வரும் நாம் ஒரு
" *சுபசிருஷ்டி பெற்ற *சுபவாசி*  "

17.கண்ணில் தெரியும் அழகான விசயங்கள் அனைத்தையும் பதிவு செய்து மீண்டும் அதை கண்களுக்கே விருந்தளிக்கும் "ஓர் #விசித்திரகலைஞன் புகைப்படகார்கள் மட்டுமே!

18.நமக்கு வயது உண்டு. ஆனால் நாம் எடுக்கும் படங்களுக்கு வயதில்லை

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

"WE PROUD TO BE A PHOTOGRAPHER"
           "WE ARE GREAT"
J .Robin

No comments: