நமது முயற்சியானது அடுத்தவரின் எதிர்பார்ப்பிற்கு மிஞ்சியதாக இருக்க வேண்டும்.
அடுத்தவரின் எதிர்பார்ப்பை மிஞ்சிய முயற்சியே வெற்றியின் ஆயுதம்.
வருத்தங்களும் வேதனைகளும் தோல்விக்கு காரணமாக இருக்க கூடாது.
வருத்தங்களும் வேதனைகளும் இருக்கும்பொழுது துணிச்சலுடன் முன்னோக்கி செல்லவேண்டும்.
உங்களது கற்பனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் போதுதான் திருப்தியான முடிவைப் பெறமுடியும்.
ஒரு வேலையை செய்யும்போது அதனை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். ஒரு போதும் தள்ளிப் போடக்கூடாது.
வேலையை தள்ளிப் போடும் பழக்கம் உடையவன் ஒரு போதும் வெற்றியை சுவைக்க முடியாது.
நாம் செய்யும் தவறிலிருந்து பாடம் கற்க வேண்டும். பாடம் கற்றுத் தராத தவறு பயனற்ற தவறு.
No comments:
Post a Comment