Sunday, March 15, 2020

இயற்கை மனிதனை வாழவைக்கும்...

*சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க  சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..!! முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்*..

*ஒரு மனிதன்  ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும்*.

*ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர்  அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது*.

*துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்*.

*சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி  தலைக்கு குளிக்கும் பொழுது  அந்த அழுக்கை  உண்ண  மீன்கள் ஓடிவரும்*.

*பாத்திரம் கழுவ  இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில்  சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன*.

*ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல்  போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின* .

*ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை*.

*அதனால் தான்  டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்*.

  இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்....

நன்றிகளும்  பிரியங்களும்...

No comments: