Wednesday, May 6, 2020

நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்...

*நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்..!!*

*தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.*

*சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.*

*மனத்தால் நினைக்க முடிந்ததை அடையவும் முடியும்!*

*இலக்கு என்பது இறுதிக்கெடுவுடன் கூடிய ஒரு கனவு!*

*ஒவ்வொரு தோல்வியும் அதற்குச் சமமான ஒரு வெற்றியின் விதையை உள்ளடக்கியே வருகிறது.*

*உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால்..*

*சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.*

*எதற்காகவும் காத்திருக்க வேண்டாம்.*

*இந்த நிமிடமே சரியான நேரம்.*

*விட்டு விலகுகிறவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.*

*வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விட்டு விலகுவதில்லை.*

*நம்மால் நமது மனதிற்குள் அமைத்துக் கொள்வதே, நம்முடைய ஒரே வரம்பு.*

*எதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ....*

*அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.*

*விருப்பமே அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.*

*உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது.....*

*நீங்கள் இப்பொழுது எங்கிருக்கிறீர்களோ அங்கேயே கூட இருக்கலாம்.*

*பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்.*

*ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.*

No comments: