Thursday, June 8, 2017

கடைசிக்கால எச்சரிக்கை... BEWARE

பெரிய பெரிய சபை கட்டிடங்களையும், ஜெப கோபுரங்களையும் தோட்டங்களையும் கூட்டங்களையும், டிவி சேனல்களையும் பிரபலங்களையும் கண்டு ஏமாந்து போகாதே!
பணக்காரன் அல்ல ஏழை லாசருவே பரலோகம் போய் சேர்ந்தான்!
எருசலேம் அரண்மனை அல்ல பெத்லகேமின் மாட்டுக் கொட்டகை!
ஐசுவரியவான்களின் காணிக்கை அல்ல..ஏழை விதவையின் இரண்டு செப்புக்காசு !
பெயர் அறியாத அநேக ஏழை எளிய விசுவாசிகளின் கண்ணீர் ஜெபங்களும்,எளிய காணிக்கைகளும், பாரத்தோடு செய்யும் தனி ஆள் மற்றும் கைப்பிரதி ஊழியங்களும்..
நடையாய் நடந்து காடுகளிலும் மலைகளிலும் செய்யும் மிஷினரி ஊழியங்களும் பரலோகக் கணக்கில் இடைவிடாமல் பதிவாகிக் கொண்டே இருக்கிறது!
*கணக்குக் கேட்கப்படும் நாட்கள் வந்துவிட்டன !*
இன்று எல்லா வருமானங்களின் மூலகாரணங்களும் தோண்டித்துருவி ஆராயப்படுகிறது..ஆதாரம் கேட்கப்படுகிறது..
*இதோ விசாரிப்பின் நாட்கள்!*
நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல..
செய்யாமல் விட்டுவிட்ட நல்லகாரியங்கள்..
தூங்கிக் கழித்த மணிநேரங்கள்..
ஜெபத்தை அலட்சியம் செய்த தருணங்கள்..
டிவியிலும் இன்ட்டெர்நெட்டிலும் நண்பர்களோடும் வீணாக செலவிட்ட நேரங்கள்..
ஆத்தும பாரமற்று அலைந்து வீணடித்த நாட்கள்..
செவியிருந்தும் செவியை அடைத்துக் கொண்ட நாட்கள்..
இவை யாவற்றுக்கும் கணக்குக் கேட்கும் நாள் வந்து விட்டது!
செய்த ஊழியங்கள் என்ன நோக்கத்துக்காக செய்யப்பட்டது என்பது தோண்டித்துருவி ஆராயப்படப் போகிறது!
"கல்லு மச்சியிலிருந்து கூப்பிடும்..
நீங்கள் சம்பாதித்த பணமும் பொருளும் உங்களுக்கு விரோதமாய் சாட்சியிடும் !
வீட்டில் தூசி படிந்து கிடக்கும் வேத புத்தகம் சாட்சி சொல்லும்..
சுவிசேஷம் அறிவிக்கப்படாத பக்கத்து வீட்டுக்காரன் உனக்கு விரோதமாய் எழும்பி நிற்பான்!
விநியோகிக்கப் படாமல் பெட்டி பெட்டியாய் சபையிலும் வீடுகளிலும் கிடக்கும் புதிய ஏற்பாடுகளும் கைப்பிரதிகளும் எழுந்து நின்று உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லும்!
*புத்தியோடு பிழைத்துக் கொள்*
~~~~~~~~~~~~~~~~~~
"இதோ இப்பொழுதே அனுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.."
பதுக்கி வைத்திருக்கும் நோட்டுக்களை என்ன செய்வது என்பதே அநேகரின் கவலை..
கர்த்தருக்காக செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் இப்போதே செய்துவிடு!
அது ஜெபமாக இருக்கட்டும்..அல்லது இது வரை தூங்கிக் கிடந்த வேத வாசிப்பாக இருக்கட்டும்..
ஓரங்கட்டப்பட்ட ஊழியமாக இருக்கட்டும்..அல்லது மன்னிக்கப்படாத கசப்புகளாக இருக்கட்டும்..
செப்பனிடப்படாத உன் ஆவிக்குரிய பலிபீடமோ அல்லது நொறுங்கிப்போன தேவனோடு உள்ள உறவோ..
எதுவாக இருந்தாலும் இன்றே இப்போதே சரி செய்துவிடு!
நாளை என்பது யாருடைய நாளேட்டிலும் இல்லை..
*Tomorrow never comes!*
ஆகவே..
"உன் வீட்டுக் காரியத்தை..
சபையின் காரியத்தை..
உன் ஆவிக்குரிய காரியத்தை..தேவனேடும் மனிதரோடும் உள்ள காரியத்தை..  ஒழுங்குபடுத்திவிடு!
பிழைக்க வாய்ப்பில்லாமல் யாவும் மரித்துப் போகுமுன் எசேக்கியாவைப் போல சுவர்ப்புறமாகவோ சிலுவையைப் பிடித்துக்கொண்டோ கண்ணீரோடு புலம்பு !
தேவனை நோக்கி வேண்டிக்கொள்..
*ஒரு வேளை  மன்னிக்கப்படலாம்..*
(அப் 8 :21)
♨♨♨♨♨♨♨

No comments: