🚩வாழ்க்கையில் நாம் நாள்தோறும் பேசும் வார்த்தைகளில் நடக்காது, முடியாது, கிடைக்காது, போன்ற எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை, எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
நீங்கள் கூறும் சொற்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை, எப்போதும் நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
🚩சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும் ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட இதய கனிவால் சாதிக்க முடியும்.
🚩ஒருவன் சுயநலமாய் மட்டும் இருப்பது தவறாகும் . ஆனாலும் அந்த சுயநலத்தில் அடுத்தவர் நலன் பாதிக்கப்படாத அளவுக்கும் மற்றும் பொதுநலமும் கலந்து இருந்தால் நிச்சயம் தவறில்லை.
🚩சொல்லும் செயலும் தூய்மையாக இருக்க வேண்டும். சொல்வதொன்றும் செய்வது வேறாக இருந்தால் இறுதியாக அது தீமையில் தான் முடியும்.
🚩அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும் (கஷ்டம்). இருக்கும் இடத்தில் இந்த நொடியில் இன்பமாக இரு. இதுவே வாழ்க்கை.
🚩இளமைக்காலம் : சக்தி இருக்கும், நேரம் இருக்கும், பணம் இருக்காது.
உழைக்கும் காலம் : பணம் இருக்கும், சக்தி இருக்கும், நேரம் இருக்காது.
முதுமைக் காலம் : நேரம் இருக்கும், பணம் இருக்கும், சக்தி இருக்காது.
அதனால் பணத்தின் பின்னே ஓடாமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்.
உழைக்கும் காலம் : பணம் இருக்கும், சக்தி இருக்கும், நேரம் இருக்காது.
முதுமைக் காலம் : நேரம் இருக்கும், பணம் இருக்கும், சக்தி இருக்காது.
அதனால் பணத்தின் பின்னே ஓடாமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்.
🚩நமது வார்த்தைகளில் இனிமையும், பணிவும் நிறைந்திருந்து, அகங்காரமற்றதாக இருந்தால் மட்டுமே பிறர் அதை கவனத்துடன் கேட்க முற்படுவார்கள். பேசுகிறவன் விதைக்கிறான், கேட்பவன் அறுவடை செய்கிறான்.
🚩வறுமைல வாடுறவன் உணவ தேடுறான்.. வயிறு நெறஞ்சவன் வசதிய தேடுறான் .. வசதி நெறஞ்சவன் புகழ தேடுறான்... ஆனா மனசு நெறஞ்சவன் வாழ்வை மகிழ்ச்சியா வாழ்றான்..
🚩தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
No comments:
Post a Comment