Wednesday, January 10, 2018

தலைவிதியை மாற்றும் நம்பிக்கை

*MORAL STORY.*

*தலைவிதியை மாற்றும் நம்பிக்கை.*

ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்க வந்திருந்தார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், நீங்கள் போருக்குச் செல்லும் வழியில், அவர்களின் குல தெய்வ கோவிலில் இராணுவப் படையை நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு, வீரர்களின் முன் ஒரு நாணயத்தை எடுத்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம்.  இல்லையேல் போரில் தோற்போம் என்று அவர்களிடம் கூறும்படி சொன்னார்.

ராஜாவும் துறவி சொன்னது போலவே சொல்லி வீரர்களைப்பார்த்து நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும், சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர்.

யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது. என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.

நீதி : நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றியும் அமைக்கலாம்.

CLICK HERE TO READ MORE GOOD STORIES

...

No comments: