முடிக்கும் முன்......
இந்து மத நால்வர்ணமுறையானது ஏதோ வேத காலத்தில் மட்டுமல்ல. இப்பொழுதும் நடைமுறையில்தான் உள்ளது என்பதுடன், அனைத்து துறையிலும் நடைபெறும் சமூக சீரழிவையும், இந்தியா வல்லரசாகாத காரணத்தையும் பாபாசாகேப் புத்தகங்கள் வாசிப்பதின் மூலமாகவே நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
பாபாசாகேப் புத்தகங்களில், முதலாவதாக நீங்கள் வாசிக்க வேண்டியது ''சாதியை அழித்தொழிக்கும் வழி'',
தமிழில்
பாபாசாகேப் தொகுதி 7, 13, 22, 36 முக்கியமாக படிக்கவும்.
மேலும், கேரளாவின் சமூக மாற்றத்திற்கு வழிகோலிய ஸ்ரீ நாராயணகுரு-வின் வரலாற்று பதிவை நேரமின்மையாலும், நமது தந்தை பெரியாரின் புரட்சியை கண்டிப்பாக நீங்கள் படித்திருப்பீர்கள் என்பதாலும் பதிய இயலாமல் போனது.
அழுகிய தக்காளி, முட்டை கூட எந்நேரமும் மேடையில் வீசப்படும் என்று தெரிந்த நிலையிலும், தன் தள்ளாத வயதிலும் மூத்திர பையை சுமந்து, ஆழமான சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்தவர் தந்தை பெரியார்.
எனினும், அவர்களது மெட்டீரியல் தேவைப்படுவோருக்கு அனுப்ப தயாராக உள்ளேன்.
இதுவரைக்கும் அம்பேத்கரியம் குறித்து தெரியலைன்னாலும் பிரச்சனையில்லை. இன்றைக்காவது தெரிஞ்ச நீங்க இதை கடைப்பிடிக்கணும் என்பதை விட, இதை எப்படியாவது கடைப்பிடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுங்கள். இதுதான் எல்லோருடைய விருப்பமும்.
என்னைப் பொறுத்தவரை, ''நான் இதை இறுதிவரை கடைப்பிடிப்பேன் என்பதை தீர்மானித்து விட்டேன். நான் தீர்மானித்தது முதல் அதில் எள்ளளவு சந்தேகமும் இல்லாமல் அது நிறைவேற்றியே தீருவேன்'' என்பதையும் உறுதி எடுத்து விட்டேன். அதைப்போல நீங்களும் முடிவெடுத்தால், அடுத்து வரும் நம் தலைமுறைகளுக்கு நன்மை நடந்தே தீரும்.
தெரியாமல் இதுவரை இருந்திருந்தால் அதற்கு மன்னிப்புண்டு. ஆனால் தெரிந்து செய்தால் அது குற்றம், அதற்கு மன்னிப்பே இல்லை'' முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.
உங்கள் வீட்டு சுவற்றில் எழுதி வையுங்கள் ''இந்தியாவை ஆள்வதே என் இறுதி லட்சியம்'' என்பதாக.
ஜெய்பீம். ஜெய்பாரத்
முற்றும்.
தொடர்புக்கு,
தனேஷ், பாளை.
9894401136.
No comments:
Post a Comment