Sunday, September 30, 2018

அருமையான ஆரோக்கியம் தரும் வாக்கியங்கள்....

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்!!....
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை!!
₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.
₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட... இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை!..
₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் .... அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .
₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
₹ சில பிள்ளைகளுக்கு, 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில்தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் தன் (பிள்ளைகளுடைய) வருமானத்தில் (பெற்றோர்) வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
₹ கெட்ட (உள்) நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
₹ மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்!... அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில், வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் .. இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...
₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!
₹ சிரித்துக் கொண்டே உன்னோடிருந்து, உன்னைச் சீரழிக்கும் துரோகியை விட ... முறைத்துக் கொண்டே, உன் முன்னிருக்கும் எதிரி மேலானவன்!!.....
₹ அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை.... பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது!
₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக் கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால், ஒருபோதும் இழந்து விடாதே..
₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம், கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
₹பேரின்பம் வேண்டாம்... சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட, நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறந்தது......
£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..
£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!! மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..! எல்லா "பிரச்சினைகளுக்கும் இந்த வாய்தான் காரணம்..!!!
£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம். உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....
£ வாழ்வோடு போராடிச் சாவதிலும், சாவோடு போராடி வாழ்வதிலுமே... வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை....... உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி 

No comments: