Monday, January 7, 2019

மெரிக்கள் மருந்து...

ஒரு_8_வயதுள்ள_சிறுமி 👧 தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்....

கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

அங்கிள்...
அங்கிள்....
என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....
அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து💊💉 வேணும்.... திக்கி... திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள். 
prescription கொண்டுவந்தாயா குழந்தை ????
அந்த குழந்தை👧 ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????
எங்கிட்ட காசு இருக்கு....
என்ற படியே தன் பைக்குள் கையை விட்டு
அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.
"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு
வர்ரேன் அங்கிள்,

மருந்து
குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா
என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ்
அங்கிள்...
குழந்தை👧 அழுகைக்கு தயார் ஆனது.
சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன ?????

குழந்தை
மென்று விழுங்கி சொன்னது #மெரிக்கள்.
கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும்
கேட்டார்.
நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுமா...
என்ன மருந்து பேரு ?????

குழந்தை👧 சற்றும் யோசிக்காமல் மீண்டும் சொன்னது #மெரிக்கள் அங்கிள்...

அப்படி
ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா
உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது ?????

குழந்தை👧 கண்ணீருடன் சொன்னது....

டாக்டர்
அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன்.
இந்த மருந்து இருந்தா தான் அண்ணன்
பிழைக்க முடியுமாமாம் அங்கிள்...
ப்ளீஸ் அங்கிள்... குழந்தை 👧
அழுகை ஆரம்பித்தது.

அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த
அவரது நண்பர்🕵
அக் குழந்தையிடம் வந்தார்.

அழுவாதே
செல்லம்.
உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன்.
முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம்.
அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்....
என்று
அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு🏚 கூட்டி சென்றார்.
வீட்டில்
அவளது அண்ணனை பரிசோதித்த🕵 அவர்...
அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு
அந்த நோயாளி குழந்தையுடன்
அதே மருத்துவமனைக்கு🏪🏩 சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டரிடம்🕵 விவரத்தை கேட்டு அறிந்தார்.

அக் குழந்தைக்கு #இருதயத்தில்_5_இடங்களில்_block இருப்பதாகவும், அறுவை✂ சிகிச்சைக்கு
5 லட்சம்💸 மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு
அந்த நண்பர்.....
டாக்டர்....
நானும் ஒரு டாக்டர் தான்
இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை✂ சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா ???? மருத்துவ செலவை முழுவதும்
நானே ஏற்றுக்கொள்கிரேன்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து
என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற
அதற்கு
மருத்துவர்

இதற்கு
மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர்
உங்களிடம்
ஏதாவது
#MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை
அந்த #miracle என்ற வார்த்தையை மருந்து தான்
என்று நினைத்து
என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான்
மூல காரணம்.

எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும்
என்று.
அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார் என்றார் !!!🤔🤔🤔🤔🤔

No comments: