Monday, January 7, 2019

சில விவசாயிகள் கவனத்திற்கு...

கீரையில் எல்ல சத்துக்களும் இருக்கு என்கிறோம்...

நச்சு - பூச்சிக்கொல்லி இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா ?

20 நாள் வளர்க்கக் கூடிய *சோகா* விதைகளை போட்டு வளர்க்க கூடிய கீரை/செடிகளில் 13 ம் நாள்,15 நாள்,18 ம் நாள் என்று கணக்கு வைத்து பூச்சி மருந்து தெளித்தால்தான் உங்கள் அருகில் இருக்கும் கடைக்கு வந்து உங்கள் அடுப்பங்கறைக்கு வந்தடையும் வரை (facial,bleech செய்த மணப்பெண் திருமண receptionக்கு freshஆ வரா மாதிரி) fresh ஆன கீரை கிடைக்கும்...

சோதனை:

வீட்டில் தொட்டியில் நீங்களே வளர்த்து சோதிக்கவும்...
கடையில் வாங்கி வந்த பொண்ணாங்கன்னி கீரையை நட்டு,வளர்த்து  பிடுங்கி 3 மணி நேரம் வெளியில் வைத்து பார்க்கவும்...

result :- பூச்சியுடன் கூடிய வதங்கிய கீரைதான் உங்களுக்கு கிடைக்கும்.

ஆக விவசாயிகள் மனநிலையில் மாற்றம் வரவேண்டும் பணம் மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் பூச்சி மருந்து தெளிக்காமல், கலப்பட சோகா விதைகளை வாங்கி வளர்க்காமல் மரபு சார்ந்த நல்ல விதைகளை விதைத்து மக்களுக்கு நல்லதை செய்து அதில் வரும் *அறம் சார்ந்த லாபத்தை* வைத்து குடும்பத்தை நடத்தலாம். நாடும் நல்லா இருக்கும் உங்க வீடும் நல்லா இருக்கும்.

நன்றி
தமிழ் மக்கள்

No comments: