யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்.
பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை!
எப்படி இவரால் இருக்க முடிகிறது?என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார்.
துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார்.
“ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு."
என் தியானம் கலைந்தது.
‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு!
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது.
என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே?
யாராவது என்னைக் கோபப்படுத்தும்போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் "வெற்றுப் படகுதான்" என்று அமைதியாகி விடுவேன்” என்றார்.
*கோபத்தின் பாதிப்பை நாம் 3வகைகளாக பிரிக்கலாம்:*
*1)கோபம் அறிவை பாதிக்கக் கூடியது*
*2)கோபம் உடலை பாதிக்கக் கூடியது*
*3)கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது*
புரிந்ததா ரகசியம் என்றார் குரு!
குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார்.
*நீதி: உண்மையான பலசாலி யார் என்றால், தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல.*
*மாறாக, கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.*
💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment