Monday, October 28, 2019

உண்மை நிகழ்வுகள்...

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி 2010-ஆம் ஆண்டு சிலி நாட்டில் நிகழ்ந்தது.

சிலி நாட்டில், கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 33 தொழிலாளர்கள் எதிர்பாராதவிதமாக மண்ணுக்குள் புதையுண்டனர். 

சுமார் இரண்டு மாத காலமாக அவர்களைத் தேடும்பணி நடைபெற்றது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்காததால் 33 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அறிவிக்கப்படும் நிலைக்கு அந்நாட்டு சுரங்கத் துறை அமைச்சர் தள்ளப்பட்டார்.

ஆனாலும் அந்நாட்டு அதிபர் செபாஸ்டின் பினேராவின் உள்ளுணர்வு அவர்கள் உயிருடன் இருப்பதாக தெரிவித்தது.

தொடர்ச்சியாக சரங்கத்தின் பல இடங்களில் துளைகள் இட்டு, சிறு குழாய்களை இறக்கி, சுரங்கத்தில் சிக்குண்டோரை தேடிப்பார்க்க உத்தரவிட்டார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

இறுதியாக துளையிட்டு வெளியே எடுத்த  சிறுகுழாயின் முனையில் "நாங்கள் அனைவரும் உயிருடன் உள்ளோம்" என்று ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட ஒரு காகிதம் வெளியே வந்தது.

அடுத்த நொடியில் மீட்புப் பணிகள் துரிதமாக முடுக்கிவிடப்பட்டன. அடுத்த நிமிடமே அந்நாட்டு அதிபர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். 

சிறு குழாய்களின் வழியே 33 பேருக்கும் குடிநீர், உணவு, மருந்து, உளவியல் ஆலோசனைகள், உறவினர்களின் கடிதங்கள் வழங்கப்பட்டன.

700 மீட்டர் ஆழத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழாய் உறைகள் செய்யப்பட்டன. பெரிய அளவில் துளைகள் இட்டு அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக 69 நாள்களுக்குப் பிறகு தனித்துவமான குழாய் உறைகள் மூலமாக 700 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

முதலாவதாக மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா வெளியே வந்ததும், அந்நாட்டு அதிபர் அவரைக் கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்து வரவேற்றார்.

தாய்லாந்தும், சிலியும் உலகின் மிகச் சிறிய நாடுகள். சிறிய நாடோ, பெரிய நாடோ ஓர் அரசு நினைத்தால், உண்மையான அக்கறையுடன் மனம் வைத்து களத்தில் இறங்கினால், ஒரேயொரு உயிரிழப்பைக்கூட தடுக்க இயலும் என்பதையே மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் தன் உயிருக்கும் மேலாக நினைக்கும் தலைவன் அமைந்துவிட்டால் அவன் வானுறையும் தெய்வம் எனப் போற்றப்படுவான்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்.

- திருக்குறள்.

1 comment:

Poov said...

இன்று நாம் கூட்டமாக கூடி ஒரு 2 வயது குழந்தையை கொன்றுவிட்டோம்