Thursday, October 3, 2019

தமிழ்நாடு செழிக்க...

தமிழ்நாடு செழிக்க
நாம் அனைவரும் சேர்ந்து
இதனை செய்தால் மட்டுமே முடியும்

மண்ணை உழுபவருக்கு
பொண்ணை கொடு!
மரத்தை நடுபவருக்கு
விருதை கொடு!

பொது வேலையில்
ஈடுபட சொல்லிக்கொடு!
பொது சேவை
செய்பவருக்கு புகழ்கொடு!

தண்ணீரை சேமிக்க
சொல்லிகொடு! இல்லை
பாலைவனமாகும் என்று
சொல்லிவிடு!

பிள்ளை பிறந்தாலும்
மரம் வை இனி
பேர் வைத்தாலும்
மரம் வை

உனக்காக
ஒரு மரம் வை மேலும்
உன் ஊருக்காக
பத்து மரம் வை

நாட்டுக்காக
நூறு மரம் வை இதை
உன் நண்பர்களையும்
செய்ய வை

குளத்தை வெட்டிவை
மரத்தை நட்டுவை
நிலத்தை உழுதுவை
தண்ணீரை சேமித்துவை

பணம் வாழ தேவை
காற்று வாழவே தேவை
மரம் அதற்க்கு தேவை
நமக்கு இதுவே தேவை

No comments: