Tuesday, May 5, 2020

தளர்ச்சி இல்லா முயற்சியே ஒரு பயிற்சிதான்...

*முயன்றால் முடியாதது இந்த உலகில் இல்லை.* விடாமுயற்சி வெற்றிக்கு வித்திடும். வாழ்வில் சுவை கூட்டுவது இந்த முயற்சிதான். வாழ்க்கை வாழ்வதும் ஒரு முயற்சிதான். பூமி சுழலுவதும் இந்த முயற்சியில்தான். தோல்விகளை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் வேண்டும். நம் செயலில் முயற்சியிருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது. முயற்சிக்கு உதாரண புருசர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால்தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.

 எறும்பின் உழைப்பில் முயற்சி இருக்கிறது. ' *'தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும் '* இது *"வள்ளுவன்" வாக்கு.*
நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும் வேண்டியதிற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சி இல்லாமல் தெரு கற்களாய் நின்று கொண்டு, விழலுக்கு இறைத்த நீராய் வேலை பார்த்துக் கொண்டு, ஆடைகடைகளில் அழகு மெழுகு பொம்மைகளாய் நின்று கொண்டு, உள்ளத்தை பூட்டி உடல் உழைக்காமல் உட்கார்ந்து உண்டு வாழ்பவர் எல்லாருக்கும் முயற்சி என்ற நான்கெழுத்து அவசியம் தேவை.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுவதும் இந்த முயற்சியே. வாய்ச் சொல்லாக முயற்சியை உச்சரிப்பதை விடுத்து. நம் செயலில் பிரதிபலிக்க வேண்டும். *சுயமுயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும்.* முயற்சி இல்லாத ஒரு செயல் சிறகில்லாத பறவை உயர பறக்க நினைப்பதற்கு ஒப்பாகும். வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. முயற்சியுடன் நம்மை நமக்குள் தேடி நம் வாழ்வை வளமாக்குவோம்.

No comments: