Saturday, December 26, 2020

வாழ்க்கையை புரிந்து கொண்டுவாழுங்கள்...

*நீங்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..*

*நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், நம் வயிறுக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு தான் சாப்பிட முடியும். அதன் கொள்ளளவு அப்படித் தான்...*

*நீங்கள் எவ்வளவு ஓடியும், வாழ்க்கை எதற்காக வாழ்கின்றோம் என்று அறியாமல் மரணிக்கின்றோமே அதை விடக் கொடுமை ஒன்று இருக்க முடியாது.*

*நாம் எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும், நாம் உண்பதும், உடுத்துவதும்் மட்டும் தான் நாம்.. சம்பாதித்ததில் அனுபவித்தது. மற்றவை அடுத்தவர்களுக்குத் தான்.*

*நாம் எல்லோரும் ஏதோ காரணமாகத் தான் உழைக்கிறோம் ; ஓடியாடி சம்பாதிக்கிறோம். ஆனால், அந்தக் காரணம் பிற்காலத்தில் வெற்றுக் காரணம் ஆகி விடுகிறது.*

*நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.. பிற்காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். நம் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். என்றெல்லாம் எண்ணி உழைக்கிறோம்..*

*சம்பாதித்தது போதும் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிற போது உடல் நலம் கெட்டு இருக்கும்..*

*பிள்ளைகள் வசதி வாய்ப்புகளைப் பெற்று விட்டு ஒதுங்கி விடுவார்கள்.*

*வேறு சிலர் தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு அதற்காக உழைப்பார்கள். அம்முயற்சிகளில் தோல்வியுற்று வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.*

*நீங்கள் சற்று நிதானமாக உட்கார்ந்து, நன்றாக மூச்சை இழுத்து விட்டு, சுவையாகப் போட்ட இஞ்சி டீயை் ஒரு மடக்கு அருந்திக் கொண்டு, வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துப் பாருங்கள்,*

*எத்தனையோ கோடி மக்கள் வந்து போன இந்த உலகத்திற்கு  நாமும் வந்து இருக்கின்றோம். ஆனால் நமக்கு முன்பு வந்தவர்களை நினைத்துப் பாருங்கள்?*

*அவர்கள் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து,உண்ர்ந்து, வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து , நிம்மதியாகக் கண் மூடி போய் விட்டார்கள்..*

*ஆனால் நம்மால் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லையே,  ஏன்?*

*வாழ்க்கை ( life style) அப்படியே மாறி விட்டது.இதற்குக் காரணம் இது இன்றைய சூழ்ச்சியாளர்களின் சூச்சம் என்பது தான் உண்மை..*

*ஆனால் நாம் தான் இன்னும் உணர்ந்த பாடு இல்லை அதை உணரும் போது நாம் இங்கே இருக்கப் போவது இல்லை.*

*வாழும் போதே முழுமையான கவனத்துடன் நமது வாழ்க்கையைத் துவங்க வேண்டும்.*

*உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தீர்மானிப்பது நீங்கள் தான்.*

*விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுங்கள். நன்றாகச் சிந்தித்து, வாழ்வின் யதார்தத்தை புரிந்து, ஆனந்தமாக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்..!!*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

No comments: