Saturday, May 29, 2021

பட்டிணத்தார் சொன்னது...

*உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது?*
*உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?*
*மலம்தான் உணவாக இருந்ததா?*
*மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?* 
.
*இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?*
*இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?*
*பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?*

 *இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது.* *எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.* *இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !* 

 *நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது* .
 *இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்* . *அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.* *அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.* 

 *காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.* *இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?*
*பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?* *சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?* 

 *கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !* 
 *பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம்* *என்று வீசிசென்ற பிறகு , மண்* *என்னைப்பார்த்து ,*
 *" மகனே !* *நானிருக்கிறேன்* . *என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.* 

*அருந்தின மலமாம் 
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் 
உவப்பன வெறுப்பாம் 
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...*

 *உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.* 

 *அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்* 

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.* 

*எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.*

*எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.*

*எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.*

 *மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.* 

*மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.*

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

*முதுமை என்று எதுவும் இல்லை.*

 *நோய் என்று எதுவும் இல்லை.* 

 *இயலாமை என்று எதுவுமில்லை.* 

 *எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.* 

*சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.*

*நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.*

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி செய்தேன்,

*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,

*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??

*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

 *உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்* 

 *உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.* 

 *உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.*

📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: