Thursday, June 8, 2017

தேவன் உங்களை உயர்த்துவார்

சிம்சோன் :
பெலிஸ்தியரை அழிக்கப் பிறந்தவன் பெண் ஆசையால்  வீழ்ந்துப்போனான்.
யோசேப்பு:
பெண் ஆசையை விட்டு விலகிஓடி பரிசுத்தத்தை காத்துக்கொண்டதால்
எகிப்தின் ஆளுநராய் உயர்த்தப்பட்டான்.
சவுல்:
பதவி மோகத்தால் தாவீதை அழிக்க ஓடி ஓடி அலைந்து  சகலத்தையும் இழந்துப்போனான்.அபிஷேகம்,பிள்ளைகள், ஆயுததாரி இவர்களோடு  தானும் மாண்டுபோனான்.
பவுல்
படிப்பு,பதவி, திறமைகள் இவை யாவும் தேவனை அறியும் அறிவுக்கு முன்பாக ஒன்றுமில்லை என தன்னை வெறுமையாக்கினதால் தேவன் அவரை உயர்த்தினார். அவரால் எழுதப்பட்ட நிரூபங்கள் மனிதர்களை மனம்திரும்ப செய்கின்றன.
யூதாஸ்காரியோத்
பண ஆசையினால் தேவ குமாரனாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுக்கவும், அப்போஸ்தல அழைப்பை, சுவிசேஷ பணியை, நித்தியவாழ்வை இழக்கவும்  நேர்ந்தது.
எலிசா:
வசதியான வாழ்வுக்கான ஏர்,ஏர்மாடுகள், உறவுகள், எல்லாவற்றையும் துறந்து அழைப்புக்கு பின்சென்றதால் இரட்டிப்பான வரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
சிந்தனை;
தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக அழைத்திருக்கிறார். அப்படியிருக்க, நீங்கள்  உங்கள் அழைப்புக்கேற்றாற்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது பெண், பொன், பட்டம், பதவி, புகழ் என, அழைப்பை  திசை திருப்பிக்கொண்டு இருக்கிறீர்களா?
உயர்வை நோக்கி நீங்கள் ஓட வேண்டாம். அழைப்பை காத்துக் கொள்ளுங்கள் ,செயல்படுங்கள்.தேவன் உங்களை உயர்த்துவார்.

No comments: