Saturday, September 9, 2017

புதிய இந்தியா


கவிஞர் பழனி பாரதி புதிய இந்தியா என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை..!!
விவசாயிகளுக்கு
*வாய்க்கரிசி* போடுவதுதான்
புதிய இந்தியா
நெசவாளர்களுக்கு
*சவத்துணி* நெய்வதுதான்
புதிய இந்தியா
சில்லறை வணிகர்களுக்கு
*நெற்றிக்காசு* வைப்பதுதான்
புதிய இந்தியா
மாட்டுக்கறி உண்பவரை
கொன்று
கொன்று
*மனிதக்கறி* உண்பதுதான்
புதிய இந்தியா
இல்லாதவனின்
*கோவணத்தை பிடுங்கி*
இருக்கிறவனுக்கு
கம்பளம் விரிப்பதுதான்
புதிய இந்தியா
மருத்துவ மனைகளில்
*மழலைகளின் மூச்சறுத்து*
வீடுகளில்
'கிருஷ்ண பாதம்' வரைவதுதான்
புதிய இந்தியா
மாநில கல்வி உரிமை பறித்து
சமூகநீதி புத்தகம் *கிழித்து*
உலக மூலதனத்துக்கு
விசிறி விடுவதுதான்
புதிய இந்தியா
பெண்களின் *தீட்டுத்துணிக்கும்*
வரி விதித்து
பத்து லட்சம் ரூபாய் 'கோட்டு' அணிந்து
சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான்
புதிய இந்தியா
செத்துச் செத்துப் பிறக்கிறது
புதிய இந்தியா
பிறந்து பிறந்து சாகிறது
புதிய இந்தியா
- பழநிபாரதி

No comments: