Sunday, July 14, 2019

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து...

🌿 _தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும்_ *நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்றமுடியாது.*

🌿 _உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன்மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு._ *தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று நம்பிக்கையோடு இரு!*

🌿 *உடலை அழகுபடுத்திக் கொள்வதைவிட மிகமிக முக்கியம்* _நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு பிறர் மனதை மதித்து வாழ்வது._

🌿 _ஒருவரை நமக்கு பிடித்திருந்தால்! அவரின் தீய குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை._ *அவரை நமக்கு பிடிக்கவில்லையானால், அவரின் நற்குணம் நம் கண்களுக்கு தெரிவதில்லை.*

🌿 _ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட,_ *விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே வெற்றி பெறுவான்.*

🌿 _அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து._ *அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.*

*🗣- சுவாமி விவேகானந்தர்.*

No comments: