*ஊசி ஒன்று தன் ஒருமுனை கூர்மையாக இருப்பதில்* *பெருமையடைந்தது.
ஆனால் தன் மறுமுனை துவாரம் இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது*.
*ஒரு நாள் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறுந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார்*.
*அப்போதுதான் அந்த ஊசிக்கு தான் அவமானமாக நினைத்த மறுமுனையின்* *முக்கியத்துவம் தெரிந்தது*.
*ஒருவர் கூர்மையான* *புத்தியுள்ளவராக* *இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது*.
*கூர்மையான ஊசி தன்னுள் நூலை* *நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது* *பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
எனவே பிறருடன்* *இணைந்து வாழும்போது எதனையும் சாதிக்கலாம்*.
*காதறுந்த ஊசி பயன் இல்லை.
அதுபோல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்*.
No comments:
Post a Comment