அவன் *ஒரு கல் உடைக்கும் தொழிலாளி*.
அந்தத் தொழிலில் அவனுக்கு *பெரிய வருமானம்* ஒன்றும் கிடைக்கவில்லை.
அன்றாட *வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக* இருந்தது. அதனால் அவனுக்கு *வாழ்க்கையே வெறுப்பாக* இருந்தது.
ஒரு நாள்,
அவன் போன வழியில் *ஒரு பணக்கார வீடு* தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை *பொருட்களும், செல்வங்களும்* அவனை விழிபிதுங்க வைத்தன.
அடடா.. அந்த *பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு*. பணக்காரன் மீது *பொறாமையாக* இருந்தது.
தனக்கும் *அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்*? என நினைத்துப் பார்த்தான்.
*என்ன அதிசயம்!* அவன் *பணக்காரனாகி* விட்டான்.
வாழ்க்கையில் அவன் *நினைத்துப் பார்த்திராத* அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.
*மற்றொரு நாள்* ஒரு *பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார்*.
அந்த அதிகாரியின் பின்னே *பல சேவகர்கள், படை வீரர்கள்*. மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர்.
அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. *எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து* வணங்கினான்.
இப்போது *கல் உடைப்பவன் மனசெல்லாம்* அந்த அதிகாரிதான் நின்றார்.
*‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும்*.
என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் *நினைப்பு பலித்தது*.
பெரும் *அதிகாரம் படைத்த அதிகாரியாகி* விட்டான்.
அவனைப் *பார்த்தாலே எல்லோரும் பயந்தனர்.* கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு *அவன் அதிகாரம் எல்லை* மீறிப் போனது.
ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன்.
*வெயில் சுள்ளென்று சுட்டது.* இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். *வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!.*
‘ஓ! உலகத்துக்கு *மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது*. இருக்கட்டும்! நானும் சூரியனாகி *எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்*’ என்றான்.
அவன் *இப்போது சூரியனாகிவிட்டான்!*
தனது கிரகணங்களை பல மடங்கு *வெப்பமாக்கி பூமியில்* செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான்.
அவனுக்கு *விவசாயிகளும் தொழிலாளர் களும் சாபமிட்டனர்*. அந்த நேரம் பார்த்து ஒரு *கரிய மேகம்* கடந்துபோனது.
சூரியன் அந்த *மேகத்துக்குள் மறைய,* மக்கள் மகிழ்ந்தார்கள்.
ஓகோ.. *மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா*! அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். *நினைத்தபடி மேகமாகிவிட்டான்*.
இப்போது *பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல* கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு.
*மக்கள் சபித்தனர்.* திடீரென பலத்த *காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல்* ஓடிப் போனது.
‘இந்த *காற்றுக்கு எவ்வளவு சக்தி*.. *நானும் காற்றாக மாறி* உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் *மேகமாக இருந்த கல் உடைப்பவன்*.
அப்படியே நடந்தது. மேகம் இப்போது *வலிமையான காற்றாகி மாறி*, பூமியையே ஆட்டிப் பார்த்தது. *மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து* வீசியது.
மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். *அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு*. பார்த்தால் ஒரு *பெரும் பாறை*.
*காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா*,
*நானும் பாறையாவேன்*’ என்றான். பாறையானான்.
பூமியில் *யாராலும் அசைக்க முடியாத பலத்துடன்* இருந்தான். அப்போதுதான் அந்த *சத்தம்* கேட்டது.
*ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம்*.
*அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது?*’ என்று பார்த்தான், *பாறையாக இருந்த கல் உடைப்பவன்.*
அந்தப் பாறையை *உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல் உடைப்பவன்.*
*ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது.*
எப்போதும்
போதும் என்ற மனமே அழகு.
No comments:
Post a Comment