Monday, February 28, 2022

சூரிய ஒளியில் சூடேற்றப்பட்ட தண்ணீர் பற்றி தெரியுமா? ஆயுர்வேத முறையில் அதன் பயன்கள்...

ஆயுர்வேத அறிவியல் என்பது பல நூற்றாண்டு வரலாற்றை கொண்டது. ஆயுர்வேத வாழ்க்கை முறையை கடைப் பிடிப்பதால் நம் உடல் நலனை சீராக வைத்துக் கொள்ள இயலும்.


அப்படியொரு பழக்கங்களில் ஒன்று தான், சூரிய ஒளியில் தண்ணீரை காய வைத்து குடிப்பது ஆகும். சூரிய ஒளி தண்ணீரில் விழும்போது, அதில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, அது உயிர் கொண்ட தண்ணீராக மாறி விடுகிறது என ஆயுர்வேதம் சொல்கிறது.

சூரியஒளி தண்ணீர் என்றால் என்ன..?

'சூர்யன்சு சந்தப்தம்' என்கிறது ஆயுர்வேதம். அதாவது சூரிய ஒளியில் தூய்மையாக்கப்பட்ட நீர் என்பது இதன் பொருள் ஆகும். நீங்கள் எந்த வகை பாட்டிலில் தண்ணீரை நிரப்பி சூரிய ஒளியில் காய வைத்தாலும், அது சூடேறி அதில் உள்ள உயிர்த்தன்மை திரும்ப கிடைத்துவிடும். சூரிய ஒளியில் இருந்து வரும் யுவி கதிர்கள் காரணமாக தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகள் குறைகின்றன. சூரிய ஒளி தண்ணீர் மூலமாக உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். உடலில் உள்ள வீக்கங்கள் குறையும்.

சூரியஒளி தண்ணீரால் கிடைக்கும் பலன்கள்

* சூரிய ஒளியில் காய வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தால் உங்களுக்கு மேம்பட்ட ஆற்றல் கிடைக்கும்.

* உங்கள் உடலில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.

* செல்களில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இது சீராக்கும்.

* வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சூரிய ஒளி தண்ணீரில் நிறைந்துள்ளன. சருமத்தை சுத்தம் செய்யவும், கண்களை கழுவவும் இது உகந்தது.

* உங்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி, பசியை தூண்டும் சக்தி சூரிய ஒளி குடிநீரில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து அசிடிட்டி, அல்சர் போன்ற போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.

* தோல் அழற்சிகளை சீராக்கி, அரிப்புகளையும் குணப்படுத்தும். இதனால், பளபளப்பான சருமம் உண்டாகும்.

 
நிறமூட்டப்பட்ட சூரிய ஒளி தண்ணீர் மற்றும் செய்முறை

* சூரிய ஒளியில் தண்ணீரை காய வைக்க நீங்கள் பயன்படுத்தும் பாட்டில்களின் கலர் மூலமாக சில பலன்களை பெற முடியும்.

* லிட் அல்லது கார்க் கொண்டு மூடக் கூடிய கலர் பாட்டில்களை இதற்கு பயன்படுத்தலாம்.

* பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, அதை 8 மணி நேரம் சூரிய ஒளியில் வைத்திருக்கவும்.

* இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு அரை கப் தண்ணீர் எடுத்து நாள் முழுவதும் பருகலாம்.

* இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்க, இதை பயன்படுத்தும் முன்பாக 8 மணி நேரம் முதல் 3 நாட்கள் வரையிலும் சூரிய ஒளியில் காயவைத்து குடிக்கலாம்.

* சூரிய ஒளி தண்ணீரால் கோபம், கவலை போன்ற பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

No comments: