Saturday, September 21, 2019

கருப்பாக இருக்கிறோம் என்ற கவலை வேண்டாம்...

*நன்றி நாட்டு மருத்துவ குழு*

கருப்பாக இருக்கிறோம் என்ற கவலை வேண்டாம்....

இதைச் செய்து பாருங்கள் மாற்றம் தெரியும்...

கடலை மாவு
தினமும் இரவில் தூங்கும் முன், கடலை மாவுடன் நீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகவும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை வாரம் இருமுறைமுறை முகத்தில் பூசி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மென்மையாகவும், வெண்மையாகவும் மாறும்.

தக்காளி, பாசிப்பயறு

இரண்டு நாட்டுத் தக்காளி எடுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். இந்த தக்காளி சாறுடன் பாசிப்பயறு மாவு சேர்த்து கலந்து தினமும் முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெள்ளையாக மாறும்.

முல்தானிமட்டி

முல்தானிமட்டியுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கேரட்

கேரட்டை மிக்ஸியில் அரைத்து, அந்த சாறுடன் காய்ச்சாத பசும்பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்றும், மென்மையாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் எலுமிச்சை சாற்றை கலந்து தடவி வர முகம் பொலிவு பெறும்.

மஞ்சள்

மஞ்சள் பவுடரும், தக்காளி சாறும் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு வர, முகம் பளிச்சென்று இருக்கும்.

No comments: