Thursday, September 12, 2019

ஆசிரியர் தின வாழ்த்து...

ஆசிரியர் தின வாழ்த்து (click to Watch The video)

உலகம் என்னும் புத்தகத்தில் சுய அறிவு கொண்டு நாம் நடக்க,

எழுத்தை நமக்கு கற்று தந்து, எழுத பழக சொல்லி கொடுத்து,

அனுபவம்தான் வாழ்கை என்று அடிமனதில் பதித்து விட்டு,

இன்முகத்துடன் நம்மை மேல் அறிவு பெற அனுப்பி விட்டு

அதே இடத்தில்  நின்று அடுத்த தலைமுறை வளர ஆயுள் முழுதும் உழைக்கும் ஆசான்கள்.

அவர்கள் இல்லையேல் நானும் இல்லை நீங்களும் இல்லை

இவன் தன்னை விட உயர்ந்து விட்டான் என்று பொறாமை படாத ஒரே ஜீவன் ஆசிரியர்தான்

ஆயிரம் ஆயிரம் மேதைகளை இந்த மண்ணிற்கு ஈந்த

அந்த மனித மா மேதைகளை போற்றிப் பணிவோம்.

நாமும் அந்த புனிதமான பணியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நினைத்து கர்வமும் பெருமையும் கொள்வோம்.

அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

No comments: