Sunday, February 24, 2019

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன... ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
உறுதி செய்துள்ளன.

இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கண்ட மிகப்பெரிய அதிர்ச்சிகரமான உண்மை
என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதை
சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது..

இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும். கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலில் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம் என்னவென்றால்.. "கறுப்பு கலர் திருஷ்டி கயிறும், எலுமிச்சம் பழமும்" தான். மெக்கானிக் திருஷ்டி கயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது. இனிமேலாச்சும் கப்பல் கிளம்பறப்ப திருஷ்டி கயிறு, எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணும்னு உலக நாடுகள் உத்தரவிட வேண்டும்..

No Emotions..
😂
😂

No Tension..
😂
😂

Just Relax..
😊
😊
😊
😊
😊

என்ன பண்ண..?
நானும் உங்கள மாதிரிதான் படிச்சேன்...!!!

No comments: